பி.இ.-எலக்ட்ரானிக்ஸ் கம்யூனிகேஷனுக்கு ஏக கிராக்கி
சென்னை: பொறியியல் நேர்காணலில், பெரும்பாலான மாணவ, மாணவியர் எலக்ட்ரானிக்ஸ் அன்ட் கம்யூனிகேஷன் பாடப் பிரிவையே விரும்பித் தேர்வு செய்கிறார்கள்.
அரசு, அரசு உதவி பெறும் கல்லூரிகள் மற்றும் தனியார் பொறியியல் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் வரும் இடங்களுக்கு கவுன்சிலிங் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
கடந்த 2 வாரம் நடைபெற்ற கலந்தாய்வு மூலம் சுமார் 20,000இடங்கள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன. இன்னும் 80,000என்ஜினீயரிங் சீட்டுகள் இருக்கின்றன.
இந்த ஆண்டு மாணவ -மாணவிகள் எலக்ட்ரானிக்ஸ் அன்ட் கம்யூனிகேஷன் என்ஜினீயரிங் பாடப்பிரிவிற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார்கள்.
பெரும்பாலான மாணவர்கள் இந்த பிரிவையே தேர்வு செய்திருக்கிறார்கள். அடுத்ததாக மோட்டார் மெக்கானிக்கல் என்ஜினீயரிங் பாடப் பிரிவை தேர்வு செய்கிறார்கள்.
கலந்தாய்வுக்கு தினமும் 3200 முதல் 3500 பேர் வரை அழைக்கப்படுகிறார்கள். இதனால் திட்டமிட்ட நாளை விட கவுன்சிலிங் முன் கூட்டியே முடிகிறது. கவுன்சிலிங்கை நீண்ட நாட்கள் நடத்தி தாமதம் செய்வதை தவிர்ப்பதற்காக இந்த முறை கூடுதலாக அமர்வு வசதி செய்யப்பட்டுள்ளது.
இதன் காரணமாக ஆகஸ்ட் 16ம் தேதியன்று முடிவதாக இருந்த கவுன்சிலிங் 10ம் தேதிய முடியவுள்ளதாக மாணவர் சேர்க்கை செயலாளர் ரைமண்ட் உத்தரியா கூறியுள்ளார்.
மேலும் இந்த ஆண்டு கவுன்சிலிங்குக்கு அழைக்கப்பட்ட 18 சதவீதம் பேர் வரவில்லை. இது கடந்த ஆண்டைக் காட்டிலும் 2 சதவீதம் அதிகமாகும்.
முதல் கட்ட கவுன்சிலிங் 29ம் தேதி முடிகிறது. 2-வது கட்ட கவுன்சிலிங் 30ம் தேதி தொடங்கி ஆகஸ்டு 10ம் தேதி வரை
நடைபெறுகிறது.












Click it and Unblock the Notifications