தமிழ் வழக்கு மொழியாவது எளிதல்ல-மொய்லி
சென்னை: சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழை வழக்கு மொழியாக்குவது எளிதான காரியமல்ல என்று மத்திய சட்ட அமைச்சர் வீரப்ப மொய்லி கூறினார்.
தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் வழக்கறிஞர் பிரிவுக் கூட்டம் சத்தியமூர்த்தி பவனில் நடந்தது. அதில் சிறப்புரையாற்றிய மொய்லி பின்னர் நிருபர்களிடம் பேசுகையில்,
நாட்டில் ஆயிரக்கணக்கான நீதிமன்றங்களில் லட்சக்கணக்கான வழக்குகள் முடிவுக்கு வராமல் நிலுவையில் உள்ளன. இந்த நிலையை மாற்ற 125 நாட்களில் சீர்திருத்த நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
போபாலில் ஆகஸ்ட் 22, 23 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ள தேசிய அளவிலான சட்ட ஆலோசனைக் கூட்டத்தில் இது குறித்து முக்கிய முடிவு எடுக்கப்படும். அவ்வாறு எடுக்கப்படும் முடிவுகள் செப்டம்பர் 30ம் தேதிக்குள் மத்திய அரசின் செயல் திட்டமாக அறிவிக்கப்படும்.
நீதிபதிகள் சொத்துக் கணக்கு தாக்கல் செய்வது தொடர்பாக தனிச் சட்டம் கொண்டுவர அரசு பரிசீலித்து வருகிறது. அதே போல நீதிபதிகள் மீது கூறப்படும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளில் இருந்து அவர்களைப் பாதுகாக்கவும் சட்டம் இயற்றப்படும்.
சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் மொழியை வழக்கு மொழியாகக் கொண்டுவர வேண்டும் என்று நீண்ட நாள்களாக கோரிக்கை இருந்து வருகிறது. இது குறித்து முதல்வர் கருணாநிதியும் வலியுறுத்தியுள்ளார்.
இதே போன்று நாட்டின் பிற மாநிலங்களிலும் அந்தந்த மாநில மொழியை வழக்கு மொழியாகக் கொண்டு வர வேண்டும் என்று கோரிக்கை எழுப்பப்பட்டுள்ளது. மாநில மொழிகளை வழக்கு மொழியாக்குவது என்பது எளிதான காரியமல்ல. இது குறித்து நீதித்துறையும், மத்திய அரசும் கலந்து பேசி ஒரு முடிவுக்கு வரும்.
ஓரினச் சேர்க்கை குறித்து டெல்லி உயர்நீதிமன்றம் சமீபத்தில் வழங்கிய தீர்ப்புக்கு அனைத்து தரப்பு மக்களிடமிருந்து பலத்த எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இது குறித்து சட்ட வல்லுனர்களிடம் கலந்துபேசி அவர்களிடம் அறிக்கை பெறப்படும்.
இந்தியாவின் கலாசாரம் மற்றும் மன உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வகையில் நல்ல முடிவு எடுக்கப்படும்.
தமிழகத்தில் திமுக, காங்கிரஸ் இடையிலான உறவு சுமுகமாக உள்ளது. ஆட்சியில் பங்கு பெறுவது குறித்து காங்கிரஸ் கட்சியினர் பல்வேறு கட்டங்களாகப் பேசி வருகின்றனர். இதுபற்றி முடிவு செய்ய வேண்டியது காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும் முதல்வர் கருணாநிதியும் தான் என்றார் மொய்லி.
இந் நிகழ்ச்சியில் மதுரை மாவட்ட அதிமுக வழக்கறிஞர் பிரிவுச் செயலாளர் கருணாகரன் தலைமையில் 35 வக்கீல்கள் அதிமுகவில் இருந்து விலகி மொய்லி முன்னிலையில் காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர்.
-
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா! -
இந்தியன் வங்கியின் சூப்பர் தங்க நகைக்கடன் திட்டம்.. 3 லட்சம் வரை ஆவணங்களின்றி அரை மணி நேரத்தில் பணம் -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க புதிய ரூல்ஸ் .. மக்கள் அறிய வேண்டிய 25 நாட்கள் விதிமுறை -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
மக்கள் நீதி மய்யம் இப்படி கேட்கும்ன்னு நினைக்கவே இல்லையே.. ஒரு செகண்ட் ஸ்டன் ஆன திமுக.. என்னாச்சு?












Click it and Unblock the Notifications