For Daily Alerts
Just In
தொண்டாமுத்தூர்-ஸ்ரீவைகுண்டம் கோரும் காங்கிரஸ்
சென்னை: இடைத் தேர்தல் நடக்கும் ஸ்ரீவைகுண்டம், தொண்டாமுத்தூர் ஆகிய தொகுதிகளை தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என்று திமுகவிடம் காங்கிரஸ் கோரிக்கை விடுத்துள்ளது.
தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு இன்று காலை முதல்வர் கருணாநிதியை அவரது கோபாலபுரம் இல்லத்தில் சந்தித்துப் பேசினார்.
சந்திப்புக்குப் பின் நிருபர்களிடம் பேசிய அவர்,
கடந்த சட்டமன்றத் தேர்தலில் தொண்டாமுத்தூர், ஸ்ரீவைகுண்டம் ஆகிய தொகுதிகளில் காங்கிரஸ் போட்டியிட்டது. இப்போது இடைத் தேர்தல் நடக்கும் 5 தொகுதிகளில் இந்த இரு தொகுதிகளும் அடக்கம். எனவே இந்த இரு தொகுதிகளையும் காங்கிரசுக்கு ஒதுக்க வேண்டும் என்று எங்களது கூட்டணித் தலைவரான முதல்வர் கருணாநிதியிடம் கோரிக்கை வைத்தேன்.
இடைத் தேர்தலை அதிமுக புறக்கணிப்பது, ஜெயலலிதாவுக்கு தோல்வி பயம் வந்துவிட்டதையே காட்டுகிறது என்றார் தங்கபாலு.
Story first published: Tuesday, July 21, 2009, 13:21 [IST]