For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

வேட்டி ஊழல்-மதுசூதனன் அப்பீல் மனு விசாரணை

By Staff
Google Oneindia Tamil News

சென்னை: இலவச வேஷ்டி, சேலைகள் வாங்கியதில் நடந்த ஊழல் தொடர்பாக 2 ஆண்டு சிறை தண்டனை வழங்கப்பட்டதை எதிர்த்து அதிமுக அவைத் தலைவர் மதுசூதனன் தாக்கல் செய்த அப்பீல் மனு மீதான விசாரணை இன்று தொடங்கியது.

1991-96ம் ஆண்டு அதிமுக ஆட்சியில் ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது 1992ம் ஆண்டுக்கு பொங்கலுக்கு ஏழைகளுக்கு இலவச வேஷ்டி, சேலைகள் வழங்க அவற்றை கொள்முதல் செய்ததில் பெரும் முறைகேடு நடந்தது.

இந்த வேட்டி, சேலைகள் வாங்கியதி்ல் நடந்த கொள்முதலில் ரூ. 3.54 கோடி ஊழல் நடந்ததாக அப்போதைய அமைச்சர் மதுசூதனனுக்கு 2 ஆண்டு சிறையும், ரூ. 20,000 அபராதமும் விதித்து தனி நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

அமைச்சராக இருந்த முத்துசாமிக்கு ஓராண்டு சிறை தண்டனையும் ரூ. 10,000 அபராதமும் மேலும் 4 பேருக்கும் சிறை தண்டனையும் விதிக்கப்பட்டது.

2000ம் ஆண்டில் விதிக்கப்பட்ட இந்தத் தீர்ப்பை எதிர்த்து மதுசூதனன் உள்ளிட்டோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் அப்பீல் மனு தாக்கல் செய்திருந்தனர்.

இந்த மனுக்கள் மீதான விசாரணை இன்று தொடங்கியது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X