கம்யூனி்ஸ்ட்களும் புறக்கணிக்க வேண்டும்-ராமதாஸ்
நெல்லை: கம்யூனிஸ்ட் கட்சிகளும்ம் இடைத் தேர்தலை புறக்கணிக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கேட்டுக் கொண்டு இருக்கிறார்.
நெல்லையில் நிருபர்களிடம் அவர் பேசுகையில்,
இடைத் தேர்தலை புறக்கணிக்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வந்து இருக்கிறோம். அதிமுக செயற்குழு கூட்டத்தில் தேர்தலை புறக்கணிக்க போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது வரவேற்கத்தக்கது. இதே போல மார்க்சிஸ்ட் கம்யூ, இந்திய கம்யூ ஆகிய கட்சிகளும் இடைத் தேர்தலை புறக்கணிக்க வேண்டும்.
ஒட்டு மொத்த எதிர்கட்சிகள் இடைத்தேர்தலை புறக்கணிக்க முடிவு செய்துள்ளன. இது எதை காட்டுகிறது, தேர்தல் ஆணையத்தின் மீதான நம்பிக்கையின்மையை காட்டுகிறது.
ஒவ்வொரு தேர்தலிலும் வெற்றி தோல்விகளை மக்கள் பிரச்சனைகள் தீர்மானிக்கும். டெல்லியில் ஒரு முறை நடந்த தேர்தலில் வெங்காய விலை வெற்றி தோல்விகளை தீர்மானித்தது. அதேபோல 1967ம் ஆண்டு நடந்த தேர்தலில் அரிசி பிரச்சனை தீர்மானித்தது. ஆனால் தற்போது பணபலம், ஆளும்கட்சியின் அதிகார தூர்பிரவேசம், கள்ளஓட்டு, ஆளும்கட்சியின் ஆஜராகம் போன்றவை வெற்றியை தீர்மானிக்கிறது.
மேலும் தற்போது கூடுதலாக வாக்கு பதிவு எந்திரத்தில் ஊழல், தேர்தல் ஆணைத்து எல்லாம் தெரிந்தும் அவர்களால் நடவடிக்கை எடுக்க முடியவில்லை. அப்படி என்றால தேர்தல் ஆணையம் எதற்கு. மாநில முதலமைச்சர்களே தேர்தலை நடத்தலாம். தேர்தல் ஆணையம் நினைத்தால் முறைகேடுகளை தடுக்க முடியும்.
தலைமை தேர்தல் அதிகாரியான டிஎன் சேஷன் இருந்த போது தனித்து நின்று சாதித்து காட்டினார். தற்போது 3 ஆணையர்கள் இருக்கிறார்கள். ஆனால் அவர்களால் நாணயமாகவும், நேர்மையாகவும் தேர்தலை நடத்த முடியவில்லை என்றார் ராமதாஸ்.
பின்னர் செய்தியாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு, ராமதாஸ் அளித்த பதில்கள்...
கேள்வி: 2011ல் நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் பாமகவின் நிலை என்ன?
பதில்: தேசிய கட்சிகள், மாநில கட்சிகள் தேர்தல் ஆணையத்திடம் இணைந்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். அதில் ஒருமித்த கருத்து ஏற்பட வேண்டும். பணம் கொடுத்து வாக்குகளை வாக்குவதை தடுப்பதற்கு என்ன வழி என்பதற்கு தேர்தல் ஆணையம் பதில் சொல்ல வேண்டும். சட்ட திட்டங்களை தேர்தல் ஆணையம் கடுமையான முறையில் கடைப்பிடிக்க வேண்டும்.
கேள்வி: நாடாளுமன்றத் தேர்தலை தொடர்ந்து பாமகவின் கொள்கையில் மாற்றம் ஏற்படுமா..?
பதில்: பாமக கொள்கை அளவில் எந்த மாற்றமும் இல்லை. பாமகவை பொறுத்தவரை சமூக நீதிக்காக போராடி வரும் கட்சி என்றார்.
-
தமிழ்நாடு அரசியலே தலைகீழாகப் போகுது.. அய்யாவை சந்தித்த சின்னம்மா! தைலாபுரத்தில் பரபரத்த மீட்டிங்! -
தமிழக அரசு ஊழியர்களின்.. ஓய்வு பெறும் வயதை 60-லிருந்து 62 ஆக உயர்த்த திட்டம்! ஸ்டாலின் மாஸ்டர்பிளான் -
“சவுதியிலிருந்து உடனே வெளியேறுங்கள்..” முதல் முறையாக அறிவித்த அமெரிக்கா! ஆக்ரோஷமான ஈரான் -
வாடகை வீடுகளில் வசிக்கிறீங்களா? வந்தது 'பம்பர்' பரிசு.. மத்திய அரசின் புது வாடகை விதி! நோட் பண்ணுங்க -
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா! -
இந்தியன் வங்கியின் சூப்பர் தங்க நகைக்கடன் திட்டம்.. 3 லட்சம் வரை ஆவணங்களின்றி அரை மணி நேரத்தில் பணம் -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்!












Click it and Unblock the Notifications