ஒரிஸ்ஸா சட்டசபையில் பாம்பு-கூட்டம் ரத்து
Subscribe to Oneindia Tamil
புவனேஸ்வர்: ஒரிசா சட்டசபைக்குள் இன்று காலை பாம்பு புகுந்து விட்டது. இதையடுத்து கூட்டம் ரத்து செய்யப்பட்டது.
மிகவும் நச்சுத்தன்மை வாய்ந்த பாம்பு அது. இன்று காலை 8 மணிக்கு அது செய்தியாளர்கள் அமரும் பகுதி வழியாக உள்ளே புகுந்தது. இதைப் பார்த்த சட்டசபை ஊழியர்கள், அதைப் பிடிக்க முயன்றனர். ஆனால் அது சட்டசபைக்குள் நழுவி மறைந்து விட்டது.
இதையடுத்து சபாநாயகர் பிரதீப் குமார் அமத்துக்குத் தகவல் போனது. அவர் இன்றைய கூட்டத்தை உடனடியாக ஒத்திவைத்து உத்தரவிட்டார்.
இதையடுத்து சட்டசபைக்குள் புகுந்த பாம்பு பிடிக்கும் ஊழியர்கள் சல்லடை போட்டு தேடினர். ஆனால் பாம்பு சிக்கவில்லை.
மோப்ப நாய்களும் வரவழைக்கப்பட்டு தேடுதல் வேட்டை நடந்தது. இருப்பினும் இதுவரை பாம்பு கிடைக்கவில்லை. வனத்துறையினரின் உதவியை தற்போது சட்டசபை நிர்வாகம் அணுகியுள்ளது.












Click it and Unblock the Notifications