சட்டசபை இடைத் தேர்தல் - நாளை திமுக நேர்காணல்
சென்னை: ஐந்து சட்டசபைத் தொகுதிகளுக்கான இடைத் தேர்தலில் போட்டியிட சீட் கோரி விண்ணப்பித்துள்ள திமுகவினரிடம் நாளை நேர்காணல் நடைபெறுகிறது.
தொண்டாமுத்தூர், பர்கூர், இளையாங்குடி, கம்பம், ஸ்ரீவைகுண்டம் தொகுதிகளில் நடைபெறவுள்ள இடைத் தேர்தலில் போட்டியிட விரும்புவோர் விண்ணப்பிக்கலாம் என திமுக தலைமை அறிவித்திருந்தது. இதையடுத்து ஏராளமான திமுகவினர் விருப்ப மனு கொடுத்திருந்தனர்.
இவர்களிடம் நாளை காலை முதல்வர் கருணாநிதி தலைமையில் நேர்காணல் நடைபெறுகிறது. நிதி அமைச்சர் அன்பழகன், துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் நேர்காணல் நடக்கிறது.
நேர்காணல் முடிந்த பின்னர், காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகள் முடிவான பின்னர் வேட்பாளர் பட்டியல் வெளியாகும் எனத் தெரிகிறது.
முன்னாள் மத்திய அமைச்சர் கண்ணப்பன் தொண்டாமுத்தூர் தொகுதிக்கும், முன்னாள் அமைச்சர் தா.கிருஷ்ணன் தம்பி ராமையா, சாத்தையா ஆகியோர் இளையான்குடி தொகுதிக்கும், ஈ.வி.கே.சம்பத் பேரன் விஜய் கமல், இந்திரா உள்ளிட்ட சிலர் பர்கூர் தொகுதிக்கும் மனு கொடுத்தனர்.












Click it and Unblock the Notifications