செப். 26ல் சனிப்பெயர்ச்சி-திருநள்ளாறில் ஏற்பாடுகள்
திருநள்ளாறு: புதுச்சேரி மாநிலம் திருநள்ளாறில் சனிப்பெயர்ச்சி செப்டம்பர் 26ம் தேதி நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமடைந்துள்ளன,
இந்தியாவில் சனி்ஸ்வரருக்கு என தனி ஆலயம் உண்டு என்றால் அது திருநள்ளாரில் உள்ள சனிஸ்வரர் ஆலயம் தான்.
இந்த ஆலயத்தில் சாமி தரிசனம் செய்ய இந்தியாவில் முக்கிய அரசியல் தலைவர்களும், பொது மக்களும் , பக்தர்களும் வந்து பயபக்தியோடு சாமி தரிசனம் செய்கின்றனர்.
திருநள்ளாறில் உள்ள இந்த ஆலயத்திற்கு தர்பாரண்யேஸ்வர சுவாமி என்ற பெயரும் உண்டு. வரும் செப்டம்பர் மாதம் 26 -ம் தேதி சனிப்பெயர்ச்சி நடைபெறுகினறது.
செப்டம்பர் மாதம் 26 -ம் தேதி பிற்பகல் 3.27 மணிக்கு சனீஸ்வர பகவான் சிம்ம ராசியிலிருந்து கன்னிராசிக்கு பெயர்ச்சி அடைகிறார்.
சனிப் பெயர்ச்சி விழாவை முன்னிட்டு அபிஷேகம், சிறப்பு பூசைகள் மற்றும் ஆராதனைகள் செய்யப்பட உள்ளன.
சனிப் பெயர்ச்சி விழாவிற்கு இரண்டு மாதங்கள் இருப்பினும் தற்போது முதலே அந்த பணயில் தீவீரம் காட்ட துவங்கியுள்ளது தேவஸ்தானம்.
இந்த சனிப் பெயர்ச்சியை முன்னிட்டு தமிழகம் மட்டும் இன்றி பல்வேறு மாநிலங்களிலும் இருந்தும் பல ஆயிரம் பக்தர்கள் திரளாக வந்து கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.












Click it and Unblock the Notifications