குடியேற்ற விதிகள்-கடுமையாக்கிய ஆஸ்திரேலியா
மெல்போர்ன்: ஆஸ்திரேலியாவில் குடியுரிமை பெறுவதற்கான விதிகள் கடுமையாக்கப்பட்டுள்ளன. குறிப்பாக நல்ல ஆங்கில மொழிப் புலமை அவசியமாக்கப்பட்டுள்ளது.
இனிமேல் குடியுரிமை கோருவோருக்கு ஆங்கில மொழிப் புலமையை பரிசோதிக்கும் தேர்வுகள் கடுமையாக இருக்கும் என அந் நாட்டு குடியுரிமைத்துறை அறிவி்த்துள்ளது.
இதுவரை ஆஸ்திரேலியாவில் கீழ்நிலைப் பணிகளில் சேர விசா கோரி விண்ணப்பித்தவர்களுக்கு சாதாரண ஆங்கில மொழி பரிசோதனை தேர்வுகளே நடத்தப்பட்டு வந்தன. இனிமேல் இந்தத் தேர்வுகள் மிகக் கடுமையாக இருக்கும்.
International English Language Testing System (IELTS) தரத்திலான இந்தத் தேர்வில் வென்றால் தான் இனி விசா கிடைக்கும்.
இதுவரை சமையல், முடிதிருத்தல் போன்ற பணிகளில் சேர விண்ணப்பித்தவர்களுக்கு உடனடியாக விசாவும் முன்னிரிமையோடு குடியுரிமையும் தரப்பட்டு வந்தது. இந்தப் பணிகளில் சேர அதிகளவில் விண்ணப்பிப்பது இந்தியர்களே. இனி இவர்கள் குடியுரிமை பெறவும் விதிகள் கடுமையாக்கப்பட்டுள்ளன.
பொருளாதாரத் தேக்கம் காரணமாக அந் நாட்டினருக்கு வேலைவாய்ப்புகளில் முன்னுரிமை தர இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக ஆஸ்திரேலியா அறிவித்துள்ளது.
இந் நிலையில் ஆஸ்திரேலியாவின் மக்கள் தொகை இந்தாண்டு 2 கோடியை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஆண்டில் மட்டும் வெளிநாட்டினர் குடியேறியதால் அதன் ம்ககள் தொகை 4 லட்சம் அதிகரித்தது.
ஆஸி பிரதமர் வருகை..
இந் நிலையில் ஆஸ்திரேலியப் பிரதமர், துணைப் பிரதமர் ஆகியோர் அடுத்த சில மாதங்களில் இந்தியா வருவர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலியாவின் குடியேற்றத்துறை அமைச்சர் கிறிஸ் இவான்ஸ் கூறுகையில்,
பிரதமர் கெவின் ரூட் இந்த வருடத்தின் இறுதியிலும், துணைப் பிரதமர் ஜூலியா கில்லர்டு செப்டம்பர் மாதத்திலும் இந்தியா வரத்திட்டமிட்டுள்ளனர் என்றார்.
ஆஸ்திரேலியாவில் இந்திய மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவங்களுக்கு பிறகு இரு தலைவர்களும் இந்தியா வருவது குறிப்பிடத்தக்கது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications