ஷார்ஜா: திருமணமாகாமல் குழந்தை-பெண் கைது
ஷார்ஜா: திருமணமாகாமல் குழந்தை பெற்ற 20 வயது ஈரான் பெண்ணை ஷார்ஜா போலீஸார் கைது செய்துள்ளனர்.
அல் ஜஹாரா மருத்துவமனையில் வைத்து இந்தப் பெண் கைது செய்யப்பட்டார்.
இந்தப் பெண்ணுக்கு கல்யாணம் ஆகவில்லை. கள்ளத்தனமாக ஏற்பட்ட காதலால் கர்ப்பமான இவர் அல் ஜஹாரா மருத்துவமனையில் பிரசவத்திற்காக சேர்ந்தார். இதையடுத்து மருத்துவமனையில் பிரசவம் பார்த்து குழந்தை பிறந்தது.
இதைத் தொடர்ந்து மருத்துவமனை நிர்வாகம் போலீஸாருக்குத் தகவல் கொடுத்தது. போலீஸார் விரைந்து வந்து அந்தப் பெண்ணைக் கைது செய்தனர்.
இதுபோல திருமணமாகாத பெண்கள் கர்ப்பம் தரித்து பிரசவத்திற்காக வந்தால் அவர்களை மருத்துவமனைகள் அனுமதிக்கக் கூடாது. மாறாக உடனடியாக போலீஸாருக்குத் தகவல் தர வேண்டும் எனவும் போலீஸார் எச்சரித்துள்ளனர்.
ஆனால் மருத்துவமனை நிர்வாகமோ, பிரசவ வலியால் துடித்த பெண்ணை எப்படி அனுமதிக்காமல் துரத்த முடியும். அதனால்தான் பிரசவம் பார்த்த பிறகு போலீஸாருக்குத் தகவல் தந்தோம் என்று விளக்கியுள்ளது.
தற்போது அந்தப் பெண் ஷார்ஜா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.