For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மண்ணுக்குள் புதைத்திருந்த கள்ள நோட்டு கட்டுகள்!

By Staff
Google Oneindia Tamil News

ராமேஸ்வரம்: ராமேஸ்வரத்தில் மண்ணுக்குள் புதைத்து வைக்கப்பட்டிருந்த 500 ரூபாய் கள்ள நோட்டு கட்டுகள் சிக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.

ராமேஸ்வரத்தில் மீன்பிடி தொழில் பிரபலம். இங்கு பிடிக்கப்படும் மீன்கள் விற்பனைக்காக கேரளாவுக்கு அதிகளவில் கொண்டு
செல்லப்படுகின்றன.

அதனால் மீன்களை வாங்கிச் செல்ல கேரள வியாபாரிகள் இந்த பகுதியில் முகாமிடுவது வழக்கம்.அவர்களில் பலர் கள்ள நோட்டை புழக்கத்தில் விடுவதாக போலீசாருக்கு புகார்கள் தொடர்ந்து வந்த வண்ணம் உள்ளது.

ஏற்கனவே ராமேஸ்வரம் வங்கிகளில் பல முறை கள்ளநோட்டுடன் வந்த மீனவர்களை எச்சரிக்கை செய்து அதிகாரிகள் அனுப்பியுள்ளனர்.

இந் நிலையில், ராமேஸ்வரம் வேர்க்கோடு இந்திரா நகர் பகுதியில்
மண்ணுக்குள் புதைந்த நிலையில் 500 ரூபாய் கள்ள நோட்டு கட்டுக்கள் இருந்ததைப் பார்த்த மக்கள் அதிர்ந்தனர்.

இது குறித்து போலீசாருக்க தகவல் தந்தனர். போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X