For Quick Alerts
For Daily Alerts
Just In
தூத்துக்குடி-2 சரக்கு ரயில்கள் மோதி தடம் புரண்டன!
தூத்துக்குடி: தூத்துக்குடி அருகே இரு சரக்கு ரயில்கள் மோதிக் கொண்ட விபத்தில் 4 பெட்டிகள் தடம் புரண்டன.
தூத்துக்குடி துறைமுகத்திலிருந்து டி.ஏ.பி. உரங்களை ஏற்றிக் கொண்டு ஈரோடுநோக்கி ஒரு ரரயில் சென்று கொண்டிருந்தது. மீளவிட்டான் ரயில் நிலையத்தில் அந்த ரயில் நின்று கொண்டிருந்தபோது அதன் 2 வது பெட்டியின் இணைப்பு திடீரென துண்டிக்கவே, மீதமுள்ள 35 சரக்கு பெட்டிகள் பின்புறமாக நகர துவங்கின.
அந்தப் பெட்டிகள் மீளவிட்டான் ரயில் நிலையம் வழியாக தூத்துக்குடி துறைமுகம் நோக்கி சென்று கொண்டிருந்த மற்றொரு சரக்கு ரயிலின் கடைசி பெட்டிகளில் மோதினது. இதில் 4 சரக்கு பெட்டிகள் தடம் புரண்டன.
நின்று கொண்டிருந்த சரக்கு ரயிலின் கார்டு அதிர்ஷ்டவசமாக கீழே குதித்து உயிர் தப்பினார். விபத்து காரணமாக அப்பகுதியில் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
Comments
Story first published: Saturday, July 25, 2009, 13:12 [IST]