'மோடியிடம் உண்மை அறியும் சோதனை நடத்த வேண்டும்'
Subscribe to Oneindia Tamil
ராஜ்கோட்: குஜராத் முதல்வர் நரேந்திர மோடிக்கு உண்மை கண்டறியும் சோதனை நடத்தப்பட வேண்டும் என்று முன்னாள் குஜராத் மாநில அமைச்சர் எஸ்.எஸ். வகேலா கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் ராஜ்கோட்டில் செய்தியாளர்களிடம் பேசுகையில், குஜராத் கலவரம் தொடர்பாக மோடியிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்தப்பட வேண்டும்.
குஜராத் கலவரம் தொடர்பாக எஸ்.ஐ.டியிடம் ஒரு மாதிரியும், நானாவதி கமிஷனிடம் வேறு மாதிரியும் பேசி வருகிறது மோடி அரசு.
எனவே உண்மையைக் கண்டறிய மோடிக்கும் அவரது அமைச்சர்கள், அரசு அதிகாரிகளுக்கும் உண்மை கண்டறியும் சோதனையை நடத்த வேண்டும்.
நானாவதி கமிஷன் விசாரணைக்கு ஒத்துழைக்கும் மோடி, சுப்ரீம் கோர்ட்டால் அமைக்கப்பட்ட எஸ்.ஐ.டி விசாரணைக்கு ஒத்துவர மாட்டேன் என்கிறார் வகேலா.












Click it and Unblock the Notifications