2 நாட்களில் காங். வேட்பாளர்கள் பெயர் அறிவிப்பு - தங்கபாலு
சென்னை: ஸ்ரீவைகுண்டம், தொண்டாமுத்தூர் தொகுதிகளுக்கான காங்கிரஸ் வேட்பாளர்கள் பட்டியல் இன்னும் 2 நாட்களில் வெளியிடப்படும் என மாநில காங்கிரஸ் தலைவர் கே.வி.தங்கபாலு தெரிவித்துள்ளார்.
சட்டசபை இடைத் தேர்தலில் தொண்டாமுத்தூர், ஸ்ரீவைகுண்டம் தொகுதிகள் காங்கிரஸுக்கு தரப்பட்டுள்ளன.
இங்கு போட்டியிடும் வேட்பாளர்கள் குறித்து இன்று செய்தியாளர்களிடம் தங்கபாலு கூறுகையில்,
இரு தொகுதிகளிலும் போட்டியிடுவதற்காக பலர் விருப்ப மனுக்கள் கொடுத்த வண்ணம் உள்ளனர். இவ்வாறு கொடுக்கப்படும் விருப்ப மனுக்கள் இன்று மாலை வரை பெறப்படும். பின்னர் விருப்ப மனுக்கள் மீது இன்றிரவு மற்றும் நாளை பரிசீலனை செய்யப்படும். அதை தொடர்ந்து நாளை மாலை இம்மனுக்களின் முழு விவரம் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டிக்கு அனுப்பி வைக்கப்படும்.
பின்னர் கட்சி தலைமையின் அனுமதியுடன் நாளை மறுநாள் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும்.
இடைத்தேர்தலில் 5 தொகுதியிலும் எங்கள் கூட்டணியே வெற்றி பெறும். தேர்தல் ஆணையத்தின் மீது எங்களுக்கு முழு நம்பிக்கை உள்ளது.
மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் வேண்டாம் என்று சொல்பவர்கள் பல தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளனரே அதை மட்டும் எப்படி ஏற்றுக் கொண்டார்கள் என்றார் தங்கபாலு.












Click it and Unblock the Notifications