For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

வாக்கு எந்திரத்துக்கு எதிராக வழக்கு-சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி

By Staff
Google Oneindia Tamil News

Electronic Voting Machine
டெல்லி: மின்னணு வாக்குப் பதிவு எந்திரங்களுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட பொது நல மனுவை விசாரணைக்கு ஏற்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.

இது தொடர்பாக வி.வி.ராவ் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் மின்னணு வாக்குப் பதிவு எந்திரங்களில் முறைகேடு செய்ய முடியும் என்றும், தேர்தல் முடிவுகளை ஆய்வு செய்த நிபுணர்கள் வாக்குப் பதிவு எந்திரத்தில் பெரும் அளவில் முறைகேடுகள் நடப்பதை கண்டுபிடித்துள்ளதாகவும்,

இதனால் அந்தக் குறைகளை சரி செய்யும் வரை அதை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரி இந்த மனுவை தாக்கல் செய்தார்.

மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் அடங்கிய டிவிசன் பெஞ்ச், இந்தக் கோரிக்கையை தேர்தல் ஆணையத்தின் முன் வைக்குமாறும், இதில் நீதிமன்றம் தலையிட முடியாது என்றும் உத்தரவிட்டு மனுவை தள்ளுபடி செய்தது.

மின்னணு வாக்குப் பதிவு எந்திரங்களே தேர்தல் தோல்விக்குக் காரணம் என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவும் கூறிக் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X