கோவை பல்கலைக்கழகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்
கோவை: கோவை அண்ணா பல்லைக்கழகத்திற்கு வெடி குண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
கோவை அண்ணாபல்லைக்கழக துணை வேந்தருக்கு ஒரு கடிதம் வந்துள்ளது. அந்த கடிதத்தில், பல்கலைக்கழக வளாகத்தில் சக்திவாய்ந்த வெடிகுண்டு வைக்கப்பட்டு இருப்பதாகவும், அது இரண்டு நாட்களுக்குள் வெடித்து சிதறும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், சாய்பாபாகாலனியில் உள்ள ஒரு நிறுவனத்தின் பெயரும் அந்த கடிதத்தில் எழுதப்பட்டுள்ளது.
இந்த மிரட்டல் கடிதம் பற்றி, பல்கலைக்கழக பதிவாளர் பழனிச்சாமி பெரியநாயக்கன் பாளையம் காவல் நிலையத்தில் புகார் செய்தார்.
புகாரின் பேரில் பெரியநாயக்கன் பாளையம் இன்ஸ்பெக்டர் சீனிவாசன் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் பல்கலைக் கழகத்தில் தீவிர சோதனை நடத்தினர்.
ஆனால், அந்த கடிதத்திஸ் குறிப்பிட்டது போல வெடிகுண்டு எதுவும் கிடைக்கவில்லை. வேண்டும் என்று யாரோ மிரட்டல் கடிதத்தை அனுப்பி உள்ளதாக தெரிகிறது என்று
போலீசார் கூறுகின்றனர்.
இருப்பினும், மிரட்டல் கடிதம் அனுப்பிய நபரை கண்டிப்பாக கண்டுபிடித்து கைது செய்வோம் என்கிறார் பெரியநாயக்கன் பாளையம் இன்ஸ்பெக்டர் சீனிவாசன்.