Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

யார் வசம் கும்ப்ளே மகள்?-பேசித் தீர்க்க உத்தரவு

Subscribe to Oneindia Tamil

Kumble with wife Chetana, children Svasti and Aruni
டெல்லி: முன்னாள் கிரிக்கெட் கேப்டன் அணில் கும்ப்ளேவின் மனைவி சேத்னாவுக்கும், அவரது முதல் கணவருக்கும் இடையே பிறந்த 14 வயது மகளை யார் வைத்து வளர்ப்பது என்பது குறித்து சேத்னாவும், அவரது முன்னாள் கணவரும் சேர்ந்து பேசி சமரசம் செய்து கொள்ளுமாறு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கும்ப்ளேவின் மனைவி சேத்னா. இவரது முதல் கணவர் குமார். கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 1999ம் ஆண்டு இருவரும் விவாகரத்து செய்து கொண்டனர். இந்தத் தம்பதிக்கு ஆருணி என்ற மகள் உண்டு.

குமாரை விவாகரத்து செய்த பின்னர் கும்ப்ளேவை மணந்து கொண்டார் சேத்னா. இவர்களுக்கு ஸ்வஸ்தி என்ற குழந்தை உள்ளது.

தற்போது ஆருணிக்கு 14 வயதாகிறது. இவரை யார் வளர்ப்பது என்பது குறித்து சேத்னாவுக்கும், குமாருக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டுள்ளது.

இதுதொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு நிலுவையில் உள்ளது.

இந்த நிலையில் வழக்கு நீதிபதிகள் தருண் சாட்டர்ஜி, லோதா ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது, குமாரும், சேத்னாவும் இந்தப் பிரச்சினை தொடர்பாக பேசி சுமூக முடிவு காணுமாறும், 3 வாரங்களுக்குள் சமரசத்தை ஏற்படுத்திக் கொள்ளுமாறும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+