தொண்டாமுத்தூரில் மட்டுமே அதிமுகவுக்கு வெற்றி வாய்ப்பு- ஜெ. முடிவுக்கு பின்னணி என்ன?

Subscribe to Oneindia Tamil

Jayalalitha
சென்னை: கடந்த லோக்சபா தேர்தலில், தொண்டாமுத்தூர் தொகுதியில் மட்டுமே அதிமுகவுக்கு கூடுதல் வாக்குகள் கிடைத்தன. எனவே இந்த இடைத் தேர்தலில் அதிமுக போட்டியிட்டாலும் கூட தொண்டாமுத்தூரில் மட்டுமே வெற்றி கிடைக்கும் என்பதால் தான் அவர் தேர்தலை புறக்கணிப்பதாகத் தெரிகிறது.

கம்பம், இளையாங்குடி, பர்கூர், ஸ்ரீவைகுண்டம், தொண்டாமுத்தூர் ஆகிய ஐந்து சட்டசபைத் தொகுதிகளுக்கு இடைத் தேர்தல் நடைபெறவுள்ளது.

இந்தத் தேர்தலை புறக்கணிப்பதாக அதிமுக அறிவித்து விட்டது.

இந்த ஐந்தில், கம்பம், தொண்டாமுத்தூர் ஆகியவை மதிமுக வசம் இருந்தவை. இளையாங்குடியில் திமுக ஜெயித்திருந்தது. பர்கூரில் அதிமுகவும், ஸ்ரீவைகுண்டத்தில் காங்கிரஸும் வென்றிருந்தன.

இந்த சட்டசபைத் தொகுதிகளில் சமீபத்தில் நடந்த மக்களவைத் தேர்தலில் பதிவான வாக்குகளைப் பார்க்கும்போது ஒரு உண்மை புலப்படுகிறது.

பர்கூரில்..

அதாவது, அதிமுக வெற்றி பெற்றிருந்த பர்கூர் தொகுதியில், லோக்சபா தேர்தலில் முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் விவரம்...

இ.ஜி. சுகவனம் (தி.மு.க.) - 53,572.
நஞ்சே கவுடு (அ.தி.மு.க.) - 48,209.
அன்பரசன் (தே.மு.தி.க.) - 18,223.
பாலகிருஷ்ணன் (பா.ஜ.க.) - 1740.

அதாவது திமுக இங்கு லோக்சபா தேர்தலில் அதிக வாக்குகளைப் பெற்றுள்ளது. அதிமுக வசம் இருந்து வந்த இந்தத் தொகுதியில் அதிமுக வேட்பாளர் நஞ்சே கவுடு 2வது இடத்தைத்தான் பிடித்துள்ளார். தேமுதிக வேட்பாளர் அன்பரசன் அதிமுக வாக்குகளைப் பிரித்ததால் வந்த வினை இது.

கம்பத்தில்...

ஜே.ம் ஆரூண் (காங்கிரஸ்) - 62,402.
தங்கதமிழ் செல்வன் (அ.தி.மு.க.) - 54,028.
சந்தானம் (தே.மு.தி.க.) - 10,608.
பார்வதி (பா.ஜ.க.) - 1501.

மதிமுக வசம் இருந்து வந்த இந்தத் தொகுதியில் காங்கிரஸ் அதிக வாக்குகளைப் பெற்றுள்ளது. அதிமுகவுக்கு 2வது இடமே. இங்கும் தேமுதிகவின் வாக்குப் பிரிப்பு அதிமுக வெற்றி வாய்ப்பில் விளையாடி விட்டது.

ஸ்ரீவைகுண்டத்தில்...

ஜெயதுரை (தி.மு.க.) - 56,505.
சிந்தியா பாண்டியன் (அ.தி.மு.க.) - 35,806.
சுந்தர் (தே.மு.தி.க.) - 8347.
சரவணன் (பா.ஜ.க.) - 5243.

இந்தத் தொகுதியிலும் அதிமுகவுக்கு 2வது இடமே கிடைத்துள்ளது. திமுக கூடுதல் வாக்குகளைப் பெற்றுள்ளது. இங்கு தேமுதிகவால் யாருக்கும் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படவில்லை.

தொண்டாமுத்தூரில்...

இங்கு மட்டும்தான் அதிமுகவின் கை ஓங்கியிருந்தது.

கே.சுகுமார் (அதிமுக) - 55,655.
சண்முகசுந்தரம் (தி.மு.க.) - 41,015.
தங்கவேல் (தே.மு.தி.க.) - 9172.
பாபா ரமேஷ் (பா.ஜ.க.) - 5550.

இந்தத் தொகுதியில், அதிமுக முதலிடத்தைப் பிடித்துள்ளது.

கடந்த முறை இருந்த இளையாங்குடி தொகுதி, மறு சீரமைப்பின் கீழ் நீக்கப்பட்டு விட்டதால் லோக்சபா தேர்தலில் அந்தத் தொகுதி இல்லை (தற்போதையை இடைத் தேர்தல் பழைய தொகுதிகளின் அடிப்படையில்தான் நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது).

இப்படி நான்கு தொகுதிகளிலும் அதிமுக ஒரு தொகுதியில் மட்டுமே லோக்சபா தேர்தலில் கூடுதல் வாக்குகளைப் பெற்றுள்ளது. அதிலும் விசேஷமாக தற்போது அதன் வசம் இருந்து வரும் பர்கூரில் அது தோல்வியுறும் நிலையில் உள்ளது.

இப்படி கூட்டிக் கழித்துப் பார்த்துத்தான் தேர்தலைப் புறக்கணிக்க ஜெயலலிதா தீர்மானித்தாரோ என்று எண்ணத் தோன்றுகிறது.

தற்போது அதிமுகவுக்காக விழுந்த வாக்குகள் இந்த இடைத் தேர்தலில் கணிசமான அளவு தேமுதிக பக்கம் சாயும் வாய்ப்பு உள்ளது. ஒரு வேளை பெருமளவில் சாய்ந்தால் தேமுதிகவுக்கு ஓரிரு தொகுதிகளில் வாய்ப்பு கிடைக்கலாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+