தொண்டாமுத்தூரில் மட்டுமே அதிமுகவுக்கு வெற்றி வாய்ப்பு- ஜெ. முடிவுக்கு பின்னணி என்ன?

கம்பம், இளையாங்குடி, பர்கூர், ஸ்ரீவைகுண்டம், தொண்டாமுத்தூர் ஆகிய ஐந்து சட்டசபைத் தொகுதிகளுக்கு இடைத் தேர்தல் நடைபெறவுள்ளது.
இந்தத் தேர்தலை புறக்கணிப்பதாக அதிமுக அறிவித்து விட்டது.
இந்த ஐந்தில், கம்பம், தொண்டாமுத்தூர் ஆகியவை மதிமுக வசம் இருந்தவை. இளையாங்குடியில் திமுக ஜெயித்திருந்தது. பர்கூரில் அதிமுகவும், ஸ்ரீவைகுண்டத்தில் காங்கிரஸும் வென்றிருந்தன.
இந்த சட்டசபைத் தொகுதிகளில் சமீபத்தில் நடந்த மக்களவைத் தேர்தலில் பதிவான வாக்குகளைப் பார்க்கும்போது ஒரு உண்மை புலப்படுகிறது.
பர்கூரில்..
அதாவது, அதிமுக வெற்றி பெற்றிருந்த பர்கூர் தொகுதியில், லோக்சபா தேர்தலில் முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் விவரம்...
இ.ஜி. சுகவனம் (தி.மு.க.) - 53,572.
நஞ்சே கவுடு (அ.தி.மு.க.) - 48,209.
அன்பரசன் (தே.மு.தி.க.) - 18,223.
பாலகிருஷ்ணன் (பா.ஜ.க.) - 1740.
அதாவது திமுக இங்கு லோக்சபா தேர்தலில் அதிக வாக்குகளைப் பெற்றுள்ளது. அதிமுக வசம் இருந்து வந்த இந்தத் தொகுதியில் அதிமுக வேட்பாளர் நஞ்சே கவுடு 2வது இடத்தைத்தான் பிடித்துள்ளார். தேமுதிக வேட்பாளர் அன்பரசன் அதிமுக வாக்குகளைப் பிரித்ததால் வந்த வினை இது.
கம்பத்தில்...
ஜே.ம் ஆரூண் (காங்கிரஸ்) - 62,402.
தங்கதமிழ் செல்வன் (அ.தி.மு.க.) - 54,028.
சந்தானம் (தே.மு.தி.க.) - 10,608.
பார்வதி (பா.ஜ.க.) - 1501.
மதிமுக வசம் இருந்து வந்த இந்தத் தொகுதியில் காங்கிரஸ் அதிக வாக்குகளைப் பெற்றுள்ளது. அதிமுகவுக்கு 2வது இடமே. இங்கும் தேமுதிகவின் வாக்குப் பிரிப்பு அதிமுக வெற்றி வாய்ப்பில் விளையாடி விட்டது.
ஸ்ரீவைகுண்டத்தில்...
ஜெயதுரை (தி.மு.க.) - 56,505.
சிந்தியா பாண்டியன் (அ.தி.மு.க.) - 35,806.
சுந்தர் (தே.மு.தி.க.) - 8347.
சரவணன் (பா.ஜ.க.) - 5243.
இந்தத் தொகுதியிலும் அதிமுகவுக்கு 2வது இடமே கிடைத்துள்ளது. திமுக கூடுதல் வாக்குகளைப் பெற்றுள்ளது. இங்கு தேமுதிகவால் யாருக்கும் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படவில்லை.
தொண்டாமுத்தூரில்...
இங்கு மட்டும்தான் அதிமுகவின் கை ஓங்கியிருந்தது.
கே.சுகுமார் (அதிமுக) - 55,655.
சண்முகசுந்தரம் (தி.மு.க.) - 41,015.
தங்கவேல் (தே.மு.தி.க.) - 9172.
பாபா ரமேஷ் (பா.ஜ.க.) - 5550.
இந்தத் தொகுதியில், அதிமுக முதலிடத்தைப் பிடித்துள்ளது.
கடந்த முறை இருந்த இளையாங்குடி தொகுதி, மறு சீரமைப்பின் கீழ் நீக்கப்பட்டு விட்டதால் லோக்சபா தேர்தலில் அந்தத் தொகுதி இல்லை (தற்போதையை இடைத் தேர்தல் பழைய தொகுதிகளின் அடிப்படையில்தான் நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது).
இப்படி நான்கு தொகுதிகளிலும் அதிமுக ஒரு தொகுதியில் மட்டுமே லோக்சபா தேர்தலில் கூடுதல் வாக்குகளைப் பெற்றுள்ளது. அதிலும் விசேஷமாக தற்போது அதன் வசம் இருந்து வரும் பர்கூரில் அது தோல்வியுறும் நிலையில் உள்ளது.
இப்படி கூட்டிக் கழித்துப் பார்த்துத்தான் தேர்தலைப் புறக்கணிக்க ஜெயலலிதா தீர்மானித்தாரோ என்று எண்ணத் தோன்றுகிறது.
தற்போது அதிமுகவுக்காக விழுந்த வாக்குகள் இந்த இடைத் தேர்தலில் கணிசமான அளவு தேமுதிக பக்கம் சாயும் வாய்ப்பு உள்ளது. ஒரு வேளை பெருமளவில் சாய்ந்தால் தேமுதிகவுக்கு ஓரிரு தொகுதிகளில் வாய்ப்பு கிடைக்கலாம்.
-
தமிழக அரசு ஊழியர்களின்.. ஓய்வு பெறும் வயதை 60-லிருந்து 62 ஆக உயர்த்த திட்டம்! ஸ்டாலின் மாஸ்டர்பிளான் -
இந்தியாவுக்கு ஆப்பு வைக்கும் ரஷ்யா.. கச்சா எண்ணெய் விலையில் இனி சலுகை இல்லை? நேரம் பார்த்து அடிக்கும் புதின் -
எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தி! திமுகவில் இணைந்த முன்னாள் எம்எல்ஏ இளையக்கண்ணு! -
NDA கூட்டணியில் தவெக? துணை முதல்வராகிறாரா விஜய்? சாணக்கியத்தனத்தை சொல்லி கொடுத்த பிரபல நடிகர் -
“சவுதியிலிருந்து உடனே வெளியேறுங்கள்..” முதல் முறையாக அறிவித்த அமெரிக்கா! ஆக்ரோஷமான ஈரான் -
விஜய்க்கு எதிராக வெளியான வீடியோ.. அதிர்ந்து போன நடிகை அம்பிகா! ஆதங்கத்துடன் பதிலடி -
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
Next CM: தமிழகத்தில் ஆட்சியை பிடிப்பது யார் தெரியுமா? சித்தர் கணிப்பை பாருங்க! அப்போ விஜய்? -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
எடப்பாடி கோட்டையில் திமுகவுக்கு ஷாக்! அதிமுகவுக்கு தாவிய முன்னாள் எம்.எல்.ஏ! -
படக்குனு 10 கிராமாவது வாங்கிப் போடுங்க! 19,000 சரிவில் தங்க விலை! அள்ளிப் போட இது தான் சரியான நேரம்!












Click it and Unblock the Notifications