2 அதிமுக மா.செக்கள் நீக்கம்-ஜெ அதிரடி

தூத்துக்குடி மாவட்ட அதிமுக செயலாளராக இருந்த மாஜி மந்திரி அனிதா ராதாகிருஷ்ணன் நீக்கப்பட்டுள்ளார். அவருக்குப் பதில் விஸ்வநாதன் நியமிக்கப்பட்டுள்ளார்.
அதே போல திருச்சி புறநகர் மாவட்டச் செயலாளராக இருந்த பாலசுப்பிரமணியன் நீக்கப்பட்டு அவருக்குப் பதில் சுப்பு நியமிக்கப்பட்டுள்ளார்.
முன்னதாக சட்டசபை இடைத் தேர்தல் புறக்கணிப்புத் தொடர்பாக மாவட்டச் செயலாளர்களுடன் கொடநாடு எஸ்டேட்டில் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா இன்று இரண்டாவது முறையாக மீண்டும் ஆலோசனை நடத்தினார்.
இன்று காலை 11 மணிக்கு கோடநாடு எஸ்டேட்டில் நடைபெற்ற இக் கூட்டத்தில் இடைத்தேர்தல் குறித்தும், கட்சியின் வளர்ச்சிப் பணிகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.
இக் கூட்டத்துத்துப் பின் அனிதா ராதாகிருஷ்ணன், பாலசுப்பிரமணியன் ஆகியோர் பதவிப் பறிப்பு அறிவிக்கப்பட்டது. இவர்களைத் தொடர்ந்து மேலும் பல மாவட்டச் செயலாளர்களும் மாற்றப்படவுள்ளதாகத் தெரிகிறது.
கடந்த 10 நாட்களில் இன்று ஜெயலலிதா கூட்டியது கட்சி நிர்வாகிகளின் 3வது முக்கியக் கூட்டம் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications