அரசுத்துறை பங்குகளை விற்க துடிக்கும் மத்திய அரசு!
டெல்லி: எத்தனை பாடங்கள் கற்றாலும், எத்தனை எதிர்ப்புகள் வந்தாலும் லாபத்தில் இயங்கும் அரசுத் துறை நிறுவனங்களின் பங்குகளை விற்பதில் முரட்டுப் பிடிவாதம் காட்டி வருகிறது ஐக்கிய முற்போக்குக் கூட்டணி தலைமையிலான மத்திய அரசு.
இன்னும் சில மாதங்களுக்குள் நவரத்னா எனப்படும் லாபம் கொழிக்கும் பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை விற்பதில் மும்முரம் காட்டி வருகிறது மத்திய அரசு.
இந்தப் பங்கு விற்பனையின் மூலமந் ரூ.25000 கோடியைத் திரட்டத் திட்டமிட்டுள்ளது. ஆனால் இதற்கு கடுமையான எதிர்ப்பு நிலவி வருகிறது.
அரசுத் துறை நிறுவனங்களில் இருக்கும் குறைபாடுகளைக் களைவதை விட்டுவிட்டு முழுக்க முழுக்க தனியார் மயமாக்குவதற்கான முயற்களில் இறங்குவது பொருளாதாரச் சிக்கல்களுக்கு வழிவகுக்கும் என பொருளாதார வல்லுநர்கள் எச்சரித்து வருகிறார்கள்.
பொருளாதாரம் வீழ்ச்சியடையும் தருணங்களில் இந்த அரசுத் துறை நிறுவனங்கள்தான் தடுப்புச் சுவர்போல இருந்து காக்கும் தன்மை கொண்டவை என்றும், பொருளாதார மந்த காலத்தில் மக்கள் நலன் சார்ந்து இயங்க தனியார் நிறுவனங்கள் முன் வராத நிலையில், அரசு நிறுவனங்களே மக்களுக்கு துணை நிற்கும் என்பதால், அவற்றை லாப நோக்கில் மட்டும் இயங்கும் அமைப்புகளாக மாற்றுவதைத் தடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டு வருகிறது.
ஆனாலும், இதற்கு செவி கொடுக்கும் மனநிலையில் அரசும் ஆட்சியாளர்களும் இல்லை. முதல் கட்டமாக நவரத்னா நிறுவனங்களின் ஒரு பகுதி பங்குகளை ரூ.12000 கோடிக்கு விற்கப் போவதாக, மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி ஏற்கெனவே தெரிவித்துள்ளார்.
இப்போது அதற்கான பூர்வாங்கப் பணிகளை மத்திய நிதி அமைச்சகம் ஆரம்பித்துவிட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
-
துரந்தர் இல்லை.. துரோகி.. இந்திய விமான படை வீரர் அதிரடி கைது! பாகிஸ்தானுக்காக உளவு பார்த்தது அம்பலம் -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு?












Click it and Unblock the Notifications