கொழும்பு, வவுனியாவில் 2 முக்கிய எல்டிடிஇ தளபதிகள் கைது
கொழும்பு: விடுதலைப் புலிகள் அமைப்பின் உளவுப் பிரிவைச் சேர்ந்த ஒரு தளபதி கொழும்பிலும், வான் படைப் பிரிவைச் சேர்ந்த முக்கிய தளபதி வவுனியா முகாமிலும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கொழும்பில் கைது செய்யப்பட்டவர் சயனைடு அருந்தி தற்கொலை செய்ய முயன்றபோது அதைத் தடுத்து போலீஸார் அவரைக் கைது செய்துள்ளனர்.
கொழும்பு, கொட்டாஞ்சேனைப் பகுதியில் உள்ள வீடு ஒன்றை தீவிரவாத தடுப்புப் பிரிவு படையினர் முற்றுகையிட்டனர்.
அப்போது வீட்டுக்குள் இருந்த பாக்கியராஜ் பிரதீப் என்பவர் சயனை அருந்தி தற்கொலைக்கு முயன்றார். அதை தடுத்து அவரை போலீஸார் கைது செய்தனர்.
அந்த வீட்டிலிருந்து தற்கொலைப் படையினர் பயன்படுத்தும் ஜாக்கெட், வெடிபொருட்கள் உள்ளிட்டவை மீட்கப்பட்டதாம்.
தெரிவித்தன.
பிரதீப், புலிகள் அமைப்பின் உளவுப் பிரிவைச் சேர்ந்த முக்கிய தளபதி என இலங்கைத் தரப்பில் கூறப்படுகிறது. கைது செய்யப்பட்ட இவரிடம் புலிகள் அமைப்பினர் யாரேனும் கொழும்பில் பதுங்கியுள்ளனரா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வவுனியாவில் உள்ள ஆனந்தகுமாரசாமி முகாமில் இருந்து கைது செய்யப்பட்ட உதயன் எனப்படும் செல்லையா உதயகுமார் என்ற இளைஞர் விசாரணையின்போது தெரிவித்த தகவல்களையடுத்தே கொட்டாஞ்சேனையில் பிரதீப் கைது செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
காவல்துறையின் சிறப்புப் பிரிவினர் அவரிடம் தற்போது விசாரணை நடத்தி வருகின்றனர்.
வான்படைத் தளபதி கைது..
இதேபோல வவுனியாவில் உள்ள அகதிகள் முகாமில் தங்கியிருந்த வான்படை தளபதி ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
ராணுவத்தினர் நடத்திய தீவிர விசாரணையில், இவர் விடுதலைப் புலிகள் அமைப்பின் வான்படை குறித்த பல ரகசியத் தகவல்களை வெளியிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதையடுத்து வவுனியா முகாம்களில் தங்கியுள்ள வான்படையைச் சேர்ந்த விமானிகளை கண்டுபிடித்துக் கைது செய்ய ராணுவம் நடவடிக்கையில் இறங்கும் எனத் தெரிகிறது.
கைது செய்யப்பட்ட வான் படைத் தளபதி யார், அவரது பெயர், ஊர் உள்ளிட்ட விவரங்களை ராணுவம் வெளியிடவில்லை.
-
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு












Click it and Unblock the Notifications