கட்சி கட்டுப்பாட்டை மீறி ச.ம.க நிர்வாகி மனு தாக்கல் !
தூத்துக்குடி: ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் சமத்துவ மக்கள் கட்சி நிர்வாகி மாவட்ட விவசாய அணி செயலாளர் அன்புசிங் சுயேச்சையாக மனு தாக்கல் செய்தார்.
தூத்துக்குடி, குலையன்கரிசலைச் சேர்ந்தவர் அன்புசிங் (43). இவர் சமத்துவ மக்கள் கட்சியின் மாவட்ட விவசாய அணி செயலாளராக உள்ளார்.
ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் தேர்தலில் சுயேச்சையாக போட்டியிட அவர், தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தில் தேர்தல் அதிகாரி துரை. ரவிச்சந்திரனிடம் மனு தாக்கல் செய்தார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், கட்சித் தலைமை தேர்தலை புறகணிப்பதாக கூறியுள்ளது. ஆனால் நான் தொண்டர்களின் உணர்வுகளை மதித்து, தொகுதி வளர்ச்சிக்காக போட்டியிடுகிறேன்.
இது குறித்து கட்சி தலைமையிடம் தெரிவித்துவிட்டேன். கட்சி கட்டுப்பாட்டை மீறியதற்காக என் மீது என்ன நடவடிக்கை எடுத்தாலும் அதை சந்திக்க தயாராக
உள்ளேன் என்றார்.
அதிமுக பாணியில் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியும் இடைத் தேர்தலைப் புறக்கணிப்பதாக அறிவித்துள்ளது நினைவிருக்கலாம்.