தமிழக பொறியியல் கல்லூரிகள் செப். 7ல் திறப்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை: தமிழகத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகள் செப்டம்பர் 7ம் தேதி திறக்கப்படும் என அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் மன்னர் ஜவஹர் தெரிவித்துள்ளார்.
பொறியியல் படிப்புக்கான 2வது கட்ட கவுன்சிலிங் இன்று தொடங்கியது. இதை துணைவேந்தர் மன்னர் ஜவஹர் பார்வையிட்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,
2-வது கட்ட கலந்தாய்வில் பங்கேற்க 58 ஆயிரம் பேருக்கு அழைப்பு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. மொத்தம் 61 ஆயிரம் இடங்கள் காலியாக இருக்கின்றன.
முதல் கட்ட கலந்தாய்வில் 45 ஆயிரம் பேருக்கு சீட் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு விண்ணப்பித்த அனைத்து மாணவ, மாணவியருக்கும் இடம் கிடைக்கும்.
முதலாம் ஆண்டு என்ஜினீயரிங் படிப்புக்கான வகுப்புகள் செப்டம்பர் 7-ம் தேதி தொடங்கும் என்றார்.












Click it and Unblock the Notifications