ஏர்டெல்லின் பிராட்பேண்ட் அதிரடி... பிந்துகிறது பிஎஸ்என்எல்!

Subscribe to Oneindia Tamil

Airtel
டெல்லி: அரசுத் துறை நிறுவனமான பிஎஸ்என்எல், அனைத்து வசதிகளும், நவீன சாதனங்களையும் வைத்துக் கொண்டு, மூடுவிழாவுக்கு நேரம் பார்த்துக் கொண்டிருக்க, அதனிடம் அலைவரிசையைப் பெறும் ஏர்டெல் தனது வாடிக்கையாளர்களுக்கு புதுப்புது வசதிகளை அளித்து மார்க்கைட்டைப் தன்பக்கம் திருப்பத் துவங்கிவிட்டது.

512 கேபிபிஎஸ் வேகம் கொண்ட பிராட்பேண்ட் இணைப்புக்கு ரூ.1099 மற்றும் சர்சார்ஜ் வசூலிக்கும் ஏர்டெல், இப்போது 1 Mbps திறன் கொண்ட பிராட் பேண்ட் இணைப்புகளுக்கு ரூ.1699 கட்டணமாக அறிவித்துள்ளது. இந்த இணைப்பு பெறுபவர்களுக்கு ஒரு தொலைபேசி இணைப்பும் ரூ.500 மதிப்புள்ள சேவைகளும் இலவசமாகத் தருவதாக அறிவித்துள்ளது.

ஏர்டெல்லின் இந்த அறிவிப்புக்குப் பிறகுததான், பிஎஸ்என்எல் மற்றும் எம்டிஎன்எல் நிறுவனங்கள் தங்கள் ஆழ்ந்த உறக்கத்திலிருந்து விழித்துள்ளன (இவர்கள் என்னென்ன Schemes வைத்துள்ளனர் என்று கேட்டால், அதை விவரமாக சொல்லக்கூடத் தெரிவதில்லை பிஸ்என்எல் வாடிக்கையாளர் சேவை ஊழியர்களுக்கு).

தனியார் நிறுவனங்கள் கட்டணக் குறைப்பில் இறங்கினால் நாங்களும் கட்டணத்தைக் குறைப்போம் என இவை அறிவித்துள்ளன.

ஆனால் கட்டணக் குறைப்பு எவ்வளவு, அதை எப்போது அறிவிப்பார்கள் என்பது குறித்து தெரியவில்லை.
பார்ப்போம்... விலையைக் குறைக்கிறார்களா... அல்லது பிஎஸ்என்எல்லையே தனியாருக்குத் தாரை வார்க்கிறார்களா என்று!.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+