பூட்டா சிங்கை விசாரிக்க சிபிஐ முடிவு - மகன் வீட்டில் ரெய்டு
டெல்லி: தேசிய எஸ்.சி, எஸ்.டி. கமிஷன் தலைவர் பூட்டா சிங்கின் சரப்ஜித் சிங் என்கிற ஸ்வீட்டி சிங் ரூ. 1 கோடி லஞ்சம் வாங்கிய வழக்கில், பூட்டா சிங்கின் பெயரும் அடிபடுவதால் அவரையும் விசாரிக்க சிபிஐ முடிவு செய்துள்ளது.
நாசிக்கைச் சேர்ந்த ராமாராவ் பாட்டீல். இவர் நாசிக் மாநகராட்யின் துப்புறவுப் பணி காண்டிராக்டை எடுத்துள்ளார். இதில் 100க்கும் மேற்பட்ட துப்புறவுத் தொழிலாளர்களை ஈடுபடுத்தியுள்ளார். அவர்களுக்கு சரிவர சம்பளம் கொடுக்காததால், பாட்டீல் மீது துப்புறவுத் தொழிலாளர்கள் தலித் வன்கொடுமைச் சட்டத்தின் கீழ் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த நிலையில், பாட்டீலை அணுகிய பூட்டாசிங்கின் மகன் ஸ்வீட்டி சிங், துப்புறவுத் தொழிலாளர்களின் வழக்கை தான் வாபஸ் பெறச் செய்ய உதவுவதாகவும், அதற்காக ரூ. 3 கோடி கொடுக்குமாறும் பேரம் பேசியுள்ளார்.
ஆனால் இதற்கு பாட்டீல் ஒத்துக் கொள்ளவில்லை. இறுதியில் ரூ 1 கோடிக்கு இறங்கி வந்தார் பாட்டீல். மேலும், சிபிஐக்கும் இதுகுறித்து அவர் தகவல் கொடுத்தார்.
இதையடுத்து சிபிஐ அதிகாரிகள் நடவடிக்கையில் இறங்கி ஸ்வீட்டி சிங்கிடம் பாட்டீல் பணத்தைக் கொடுத்தபோது கைது செய்தனர்.
இந்த வழக்கு தொடர்பாக ஏற்கனவே அனூப் பகே என்பவரும் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் காங்கிரஸ்காரர். இவரிடம் விசாரணை நடத்தியபோது, பூட்டா சிங் வீட்டில், அவர் முன்னிலையில்தான் பேரமே நடந்தது என்றார். ஆனால் இதை பூட்டா சிங் நேற்று மறுத்திருந்தார்.
இந்த நிலையில், ஸ்வீட்டி சிங் கொடுத்த வாக்குமூலத்தில் தான் பணம் வாங்கியது தனது தந்தைக்குத் தெரியும் என்று கூறியுள்ளதால் வழக்கில் பெரும் திருப்பம் ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து பூட்டா சிங்கையும் விசாரிக்க சிபிஐ அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். இதனால் பூட்டாசிங்குக்கு பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
காங்கிரஸ் மெளனம்..
பூட்டாசிங் விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் கட்சி மெளனமாக உள்ளது. சட்டம் தன் கடமையைச் செய்யும் என்று மட்டும் காங்கிரஸ் தரப்பிலிருந்து கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்வீட்டி வீட்டில் ரெய்டு
இதற்கிடையே தெற்கு டெல்லியில் உள்ள பூட்டாவின் மகன் சரப்ஜித் சிங் வீட்டில் போலீஸார் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது 3 கைத்துப்பாக்கிகள், 38 தோட்டாக்கள் சிக்கின.
இதையடுத்து அவர் மீது ஆயுதத் தடைச் சட்டத்தின் கீழ் ஒரு வழக்கைப் போலீஸார் பதிவு செய்துள்ளனர்.
-
Jayalalitha: நானும் ஜெயலலிதாவும் சர்ச் பார்க் பள்ளியில்தான் படித்தோம்! மணப்பாறையில் கனிமொழி பேச்சு -
ரஷ்ய கஜானாவில் அடி.. இந்தியாவுக்கு ஓடி வந்த புடின் அரசு.. LPG பிரச்சனைக்கு வழிபிறந்தது? -
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
ஈரான் போரை வைத்து பணம் பார்க்கும் டிரம்ப் வாரிசுகள்.. நடுவில் சிக்கிக்கொண்ட அரபு நாடுகள்! -
சிங்காநல்லூர் காங்கிரஸ் வேட்பாளர் ஶ்ரீநிதி அண்ணாமலை ஆதரவாளராமே.. போராட்டத்தில் குதித்த கதர்கள் -
அமெரிக்க கோட்டையில் ஓட்டை! ஈரானின் 'துல்லிய' ட்ரோன் தாக்குதல்: சிதறிய சி.ஐ.ஏ ரகசியங்கள்! -
Sundar C: ஏங்க கனிமொழி மட்டும் தூத்துக்குடிக்காரங்களா? நானும் மதுரைக்காரன்தான்! சுந்தர் சி விமர்சனம் -
தமிழ் புத்தாண்டு பலன்: விருச்சிக ராசிக்கு 9 இல் குரு.. தொட்டதெல்லாம் தங்கமாகப் போகுது -
குஷ்புவிடம் 3.5 கிலோ தங்கம், 24.3 கிலோ வெள்ளி இருக்கு.. சுந்தர்.சி சொத்து மதிப்பு எவ்வளவு? -
டாக்டர் படிப்பை முடித்த அனிதா சம்பத்.. உருக்கமாக சொன்ன தகவல்! கடைசியில் இப்படி ஆகிடுச்சே! -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் உச்சவரம்பு நீக்கம்.. ரிசர்வ் வங்கி மக்களுக்கு ஜாக்பாட்.. சாதக, பாதகம் என்ன












Click it and Unblock the Notifications