பூட்டிய காருக்குள் சிக்கிய சிறுவன் மீட்பு
கரூர்: காருக்குள் சிக்கிக்கொண்ட சிறுவனை, சரியான நேரத்தில் செயல்பட்டு போலீசார் காப்பாற்றினர்.
கரூர் ஐந்து ரோடு பகுதியைச் சேர்ந்தவர் கோவிந்தசாமி. இவர் கரூரில் உள்ள ஜி.கே. பைனான்ஸ் நிறுவனத்தில் கார் டிரைவராக பணி புரிந்து வருகின்றார்.
இவர், காரை கழுவி சுத்தப்படுத்த வாங்கல் பாலமாள்புரம் அருகில் உள்ள காவிரி தண்ணீர் சப்ளையாகும் குழாய் ஏர் ஹோல் அருகே சென்று காரை சாலையோரம் நிறுத்தி விட்டு, வாளியில் தண்ணீர் நிரப்பும் வேலையில் கோவிந்தசாமி ஈடுபட்டார்
அப்போது, தன்னுடைய மூன்று வயது மகன் ஆனந்தையும் உடன் அழைத்து சென்றிருந்தார். காருக்குள் இருந்த சிறுவன் ஆனந்த், கோவிந்தசாமியின் சட்டை பாக்கெட்டில்
இருந்த கார் சாவியை வைத்து விளையாடிக் கொண்டிருந்தான்.
அப்போது, எதிர்பாராதவிதமாக காரின் கதவுகள் மூடிக் கொணடன. அதிர்ச்சியடைந்த கோவிந்தசாமி, தனது உரிமையாளர் வீட்டில் மாற்று சாவி கொண்டுவரும் முயற்சியில் ஈடுபட்டார். ஆனால், காற்று இன்றி சிறுவன்
மயங்கி விழுந்தான்.
தகவல் அறிந்த பொது மக்கள் சிலர் முன் வந்து காரை திறக்க முயன்றனர். ஆனால் முடியவில்லை. இந்த நிலையில், பசுபதிபாளையம் இன்ஸ்பெக்டர்
மோகன்தாஸுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த இன்ஸ்பெக்டர் மோகன்தாஸ் மற்றும் போலீசார் கார் கண்ணாடியை உடைத்து சிறுவனை உயிரோடு மீட்டனர்.
பிரச்சனைக்குரிய சம்பவம் தங்களது எல்லை இல்லை என்றாலும் , பிரச்சனையின் உக்கிரம் அறிந்து விரைந்து சாதுர்யமாக செயல்பட்டு சிறுவனின் உயிரை மீட்ட பசுபதிபாளையம் இன்ஸ்பெக்டர் மோகன்தாஸை அனைவரும் பாராட்டினர்.












Click it and Unblock the Notifications