குடிபோதையில் உதட்டை கடித்து துப்பியவர் எஸ்கேப்
கும்பகோணம்: கும்பகோணம் அருகே குடிபோதையில், ஏற்பட்ட தகராறில் குடித்தவர், இன்னொருவரின் உதட்டைக் கடித்து துப்பி விட்டு ஓடி விட்டார்.
கும்பகோணம் அருகே உள்ள திருமாந்துறை மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சந்திரகாசு மகன் மகாலிங்கம் (38). அதே பகுதியை சேர்ந்தவர் நல்லதம்பி மகன் ராமமூர்த்தி (35).
இவர்கள் இருவருக்கும் ஏற்கனவே முன் விரோதம் இருந்துள்ளது. இந்த நிலையில், அந்த பகுதியில் நடந்த கோவில் திருவிழா ஒன்றில் திடீர் தகராறு ஏற்பட்டது.
குடிபோதையில் இருந்த ராமமூர்த்தி, மகாலிங்கத்தின் உதட்டை கடித்து துப்பினார். இதில் படுகாயம் அடைந்த மகாலிங்கம் கும்பகோணம் அரசு மருத்துவமனையில்
சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் குறித்து திருப்பனந்தாள் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். போலீசார் தேடுவதை அறிந்த ராமமூர்த்தி தலைமறைவாகிவிட்டார்.












Click it and Unblock the Notifications