ஹோமோ செக்ஸ்: வாலிபருக்கு கத்திக்குத்து-சிறுவன் கைது
Subscribe to Oneindia Tamil
பவானி: ஓரினச் சேர்க்கை உறவுக்கு வர மறுத்த இளைஞரை, கத்தியால் குத்தியதாக சிறுவனை போலீஸார் கைது செய்துள்ளனர்.
ஈரோடு மாவட்டம் நசியனூர் மேற்குப்புதூரை சேர்ந்தவர் பெருமாள். இவருக்கு திருமணமாகி குழந்தைகள் உள்ளனர். இவரது வீட்டில் கட்டிடப்பணி நடைபெற்று வருகின்றது.
அந்த கட்டிட பணிக்கு வந்த தொழிலாளி வீரக்குமார் (17) என்பவர் பெருமாளை ஓரினச் சேர்க்கைக்கு அழைத்துள்ளார். இதில் ஆவேசம் அடைந்த பெருமாள் வீரக்குமாரை கடுமையாக திட்டி எச்சரித்துள்ளார்.
இதில் ஆத்திரமடைந்த வீரக்குமார் மறைத்து வைத்திருந்த கத்தியால் பெருமாளின் மார்பு மற்றும் வயிற்று பகுதிகளில் சரமாரியாக குத்தினார். இதில் பெருமாள் படுகாயமடைந்தார்.
அவரை சிகிசிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பெருமாள் கொடுத்த வாக்குமூலத்தின்படி வீரக்குமாரை சித்தோடு போலீஸார் கைது செய்தனர்.












Click it and Unblock the Notifications