கடும் நடவடிக்கை... விமான நிறுவனங்களுக்கு அரசு எச்சரிக்கை!
டெல்லி: ஆகஸ்டு 18-ந்தேதி முதல் விமானங்கள் இயக்கப்பட மாட்டாது என விமான நிறுவனங்கள் அறிவித்திருப்பதை வாபஸ் பெறாவிட்டால் கடும் நடவடிக்கையை எதிர்கொள்ள நேரிடும் என விமானப் போக்குவரத்துத்துறை அமைச்சர் பிரஃபுல் படேல் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
'விமான நிறுவனங்கள் சந்தித்து வரும் சிரமங்களை அரசு புரிந்துகொண்டுள்ளது. எனினும் பயணிகளுக்கு அசெளகரியங்கள் ஏற்படுத்தும் எந்த நடவடிக்கையையும் அரசு ஆதரிக்காது' என படேல் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த வருமாறு விமான நிறுவனங்களுக்கு அறிவுறுத்தியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ள படேல், வேலைநிறுத்த அச்சுறுத்தலை வாபஸ் பெறாவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்குமாறு விமானப் போக்குவரத்து இயக்குநரகத்துக்கு உத்தரவிடப்படும் என்றார்.
பயணிகளுக்கு ஏற்படும் சிரமங்களைக் குறைக்க அரசின் ஏர் இந்தியா நிறுவனம் ஆகஸ்டு 18 முதல் கூடுதலாக விமானங்களை இயக்கும் என படேல் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications