ஒரு கட்சியின் தூண்டுதலால் என்னைப் பலிகடாவாக்குகிறது சிபிஐ - பூட்டா சிங்
டெல்லி: எனது மகன் சரப்ஜோத் சிங் கைது விவகாரத்தில் ஒரு அரசியல் கட்சியின் சதி உள்ளது. அந்தக் கட்சியின் தூண்டுதலால்தான் எனது மகனைக் கைது செய்த சிபிஐ இபபோது என்னையும் பலிகடாவாக்க முயலுகிறது என்று குற்றம் சாட்டியுள்ளார் தேசிய எஸ்.சி, எஸ்.டி ஆணையத் தலைவர் பூட்டா சிங்.
துப்புறவு காண்டிராக்டர் ராமாராவ் பாட்டீல் என்பவரிடமிருந்து ரூ. 1 கோடி லஞ்சம் வாங்கியதாக சரப்ஜோத் சிங்கை சிபிஐ கைது செய்துள்ளது. அவரது வீட்டையும் ரெய்டு செய்து அங்கிருந்து துப்பாக்கி, தோட்டாக்களைப் பறிமுதல் செய்துள்ளனர். அது தொடர்பாக தனியாக ஒரு வழக்குப் போடப்பட்டுள்ளது.
லஞ்சம் வாங்கியது பூட்டா சிங்கின் ஆலோசனையின்பேரில்தான் என்று தற்போது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதையடுத்து பூட்டாவையும் விசாரிக்க சிபிஐ முடிவு செய்துள்ளது.
இந்த விவகாரத்தில் காங்கிரஸ் சுத்தமாக பூட்டா சிங்கை கைகழுவி விட்டது.
இந்த நிலையில் சிபிஐயின் நடவடிக்கைக்கு ஒரு அரசியல் கட்சியே காரணம் என்று பூட்டா சிங் குற்றம் சாட்டியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், ஒரு அரசியல் கட்சியின் சதியே இந்த நடவடிக்கைகளின் பின்னணியாகும். புலனாய்வு அமைப்பாக சிபிஐ செயல்படவில்லை. ஆனால் குற்றவாளி ஒருவருடன் சேர்ந்து கொண்டு என்னையும், எனது மகனையும், பலிகடாவாக்க முயலுகிறார்கள்.
என்னைப் பழி தீர்ப்பதற்காக எனது மகனை பகடைக் காயாக பயன்படுத்துகிறார்கள்.
இதுகுறித்து நான் பிரதமரிடம் ஏற்கனவே பேசியுள்ளேன். அவரை சந்திக்க நேரம் கேட்டுள்ளேன். யாரையும் நான் இப்போது குற்றம் சாட்ட விரும்பவில்லை. நேரம் வரும்போது நான் பேசுவேன். உரிய முறையில் உரிய இடத்தில் அதைத் தெரிவிப்பேன்.
உரிய முறையில் என்னை விசாரிக்க சிபிஐ வந்தால் அதற்கு நான் முழு ஒத்துழைப்பு தருவேன் என்றார்.
இதற்கிடையே, இந்த விவகாரத்தில் அரசியல் நெருக்கடி எதுவும் இல்லை என்று சிபிஐ கூறியுள்ளது. மேலும், இந்த வழக்கு தொடர்பாக உள்துறைக்கு எந்த அறிக்கையும் அனுப்பப்படவில்லை என்றும் சிபிஐ தெரிவித்துள்ளது.
-
ரஷ்ய கஜானாவில் அடி.. இந்தியாவுக்கு ஓடி வந்த புடின் அரசு.. LPG பிரச்சனைக்கு வழிபிறந்தது? -
Jayalalitha: நானும் ஜெயலலிதாவும் சர்ச் பார்க் பள்ளியில்தான் படித்தோம்! மணப்பாறையில் கனிமொழி பேச்சு -
பாடகி சுஜாதா மோகனுக்கு இருக்கும் பிரச்சனை.. யாராவது உதவுங்க! ஏ.ஆர் ரகுமான் சகோதரி உருக்கமான வேண்டுகோள் -
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
திமுக கூட்டணியில் அடுத்த விக்கெட்.. விலகிய கையோடு அதிமுக கூட்டணியில் ஐக்கியம்.. யாருனு பாருங்க -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
தங்கத்தை அடகு வைத்து.. அந்த பணத்தில் புதிதாக தங்கம் வாங்கலாமா? மிக ஈஸியாக விளக்கிய ஆனந்த் சீனிவாசன் -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் உச்சவரம்பு நீக்கம்.. ரிசர்வ் வங்கி மக்களுக்கு ஜாக்பாட்.. சாதக, பாதகம் என்ன -
குஷ்புவிடம் 3.5 கிலோ தங்கம், 24.3 கிலோ வெள்ளி இருக்கு.. சுந்தர்.சி சொத்து மதிப்பு எவ்வளவு? -
ஈரான் போரை வைத்து பணம் பார்க்கும் டிரம்ப் வாரிசுகள்.. நடுவில் சிக்கிக்கொண்ட அரபு நாடுகள்! -
Thaai Kizhavi OTT: சொன்ன தேதிக்கு முன்பு ஓடிடியில் வந்த தாய் கிழவி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பு! ட்விஸ்ட் -
"FCRA சட்டத்திருத்தம் குரூரமானது.. கிறிஸ்தவ கல்வி நிறுவனங்களை முடக்க முயற்சி" - திமுக எம்.பி வில்சன்












Click it and Unblock the Notifications