முகாம்களிலேயே தமிழர்களை நீண்ட காலத்திற்கு முடக்கி வைக்க ராஜபக்சே திட்டம் - ரணில்
கொழும்பு: தமிழர்களை அவர்களது சொந்த ஊர்களில் குடியமர்த்தும் நோக்கில் ராஜபக்சே அரசு செயல்படவில்லை. முகாம்களிலேயே அவர்களை நீண்ட காலத்திற்கு முடக்கி வைக்க ராஜபக்சே திட்டமிட்டு செயலாற்றி வருகிறார் என்று முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே கூறியுள்ளார்.
இதுகுறித்து தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில்,
முகாம்களில் உள்ள தமிழ் மக்களுக்கு உணவு, குடிநீர் போன்றவை போதிய அளவு வழங்கப்படுவதில்லை. குடும்பத்தினர் தனித் தனியாக பிரித்து வைக்கப்பட்டுள்ளனர். குடும்பத்தினரை ஏன் பிரித்து வைக்க வேண்டும். அவர்களை ஒரே முகாமில் வைப்பதில் என்ன சிக்கல்.
வன்னிப் பகுதியைச் சேர்ந்த தமிழ் மக்கள் தங்கள் வசிப்பிடங்களுக்கு விரைவில் திரும்ப விரும்புகின்றனர். அதற்கான நிதியுதவியையும் அவர்கள் எதிர்பார்க்கின்றனர்.
ஆனால் வட பகுதியில் விடுதலைப் புலிகள் ஏராளமான கண்ணி வெடிகளை புதைத்து வைத்துள்ளதால் அவற்றை அப்புறப்படுத்திய பிறகே தமிழர்கள் அப் பகுதிக்கு அனுப்ப முடியும் என்று இலங்கை அரசு கூறி வருகிறது.
உண்மையில் கண்ணி வெடிகள் இல்லாத இடங்களும் உள்ளன. போரில் வன்னிப் பகுதியில் 70 சதவீத வீடுகள் இடிந்துவிட்டன. எஞ்சிய வீடுகளும் சேதமடைதுள்ளன.
தமிழர்கள் தங்கவைக்கப்பட்டுள்ள முகாம்களை பார்வையிட எதிர்க்கட்சிக்கு கூட அரசு அனுமதி தர மறுக்கிறது. அரசின் முடிவை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளோம்.
பாதிக்கப்பட்ட தமிழர்களுக்காக அரசு நிதி திரட்டி வருகிறது. இந்திய அரசு ரூ. 500 கோடி நிதி அறிவித்துள்ளது. அதுபோல் உலக வங்கியிடம் நிதி உதவி கோரப்பட்டுள்ளது. ஆனால் பாதிக்கப்பட்ட தமிழர்களை முகாம்களில் வைத்து விட்டு இவர்கள் யாருக்காக இந்த நிதியை வசூல் செய்கிறார்கள் என்று தெரியவில்லை. பாதிக்கப்பட்டவர்கள் முகாம்களில் இருக்கும்போது வன்னிப் பகுதியை எப்படி சீரமைக்க முடியும் என்றார் அவர்.
-
இன்னும் சில மணி நேரத்தில் அமெரிக்கா எடுக்கும் முடிவு.. தங்க மார்கெட்டை தாக்க போகும் சூறாவளி! -
Thaai Kizhavi OTT: ஓடிடியில் வெளியாகும் தாய் கிழவி.. எப்போது, எதில் பர்க்கலாம்? வெளியான தகவல் -
அரபு நாடுகளில் இந்தியர்களின் 12, 000 கோடி முதலீடு காலி.. 800 நிறுவனங்கள் எதிர்காலம் கேள்விக்குறி! -
கோவை தெற்கில் களமிறங்கும் மகேந்திரன்.. ஆதரவாக இருக்கும் செந்தில் பாலாஜி.. கணக்கு போடும் ஸ்டாலின்! -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
திருப்பரங்குன்றம் வழக்கு.. நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் உத்தரவுக்கு இரு நீதிபதிகள் அமர்வு இடைக்கால தடை -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
காட்டி கொடுக்கும் ரஷ்யா.. அமெரிக்க படைகள் தலைக்கு மேல் சுற்றும் கத்தி.. பெரிய சிக்கலில் டிரம்ப்? -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
ஆதவை கண்டித்த ரஜினிகாந்த்..பாஜக சரத்குமாரை எப்போது கண்டிப்பிங்க.. வீடியோவால் சூப்பர் ஸ்டாரை சீண்டும் தவெக












Click it and Unblock the Notifications