கோவை குண்டுவெடிப்பு வழக்கு - அப்பீல் மனு மீதான விசாணை தொடக்கம்
Subscribe to Oneindia Tamil
சென்னை: கோவை குண்டுவெடிப்பு வழக்குத் தீர்ப்பை எதிர்த்து தொடரப்பட்டுள்ள அப்பீல் மனு மீதான விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று தொடங்கியது.
1998-ம் ஆண்டு கோவையில் அடுத்தடுத்து பல்வேறு இடங்களில் குண்டு வெடித்தது.
இந்த வழக்கில் கைதான அல்- உம்மா இயக்க தலைவர் பாட்ஷா உள்பட 43 பேருக்கு ஆயுள் தண்டனையும், மதானி உள்பட 8 பேரை விடுதலை செய்தும் கோவை தடா கோர்ட் தீர்ப்பு அளித்தது.
இந்த தீர்ப்பை எதிர்த்து குண்டு வெடிப்பில் பலியான போலீஸ்காரரின் தந்தை வெள்ளியங்கிரி என்பவர் வழக்கு தொடர்ந்தார். இந்த அப்பீல் மீதான விசாரணை தொடங்கியுள்ளது.
நீதிபதிகள் பிரபாஸ்ரீதேவன், சத்திய நாராயணன் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்பு இந்த மனு விசாரணைக்கு வந்தது. குற்றம் சாட்டப்பட்டவர்கள் சார்பில் மூத்த வக்கீல் என்.நடராஜன் ஆஜரானார்.












Click it and Unblock the Notifications