விவசாய சங்க தேர்தல் - மோதலில் வாலிபர் கொலை !

Subscribe to Oneindia Tamil

திருநெல்வேலி: நெல்லை அருகே நடைபெற்ற விவசாய சங்க தேர்தல் தெடார்பான விவகாரத்தில் வாலிபர் ஒருவர் அரிவாளால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.

நெல்லை மாவட்டம் கீழகுன்னத்தூரை சேர்ந்தவர் பால்சாமி (36). இவர் கந்து வட்டித் தொழில் செய்து வந்தார்.

சமீபத்தில், விவசாய சங்கத்தின் நீரினை பயன்படுத்துவோர் குறித்த தேர்தல் நடைபெற்றது. இதில் பாலுச்சாமி ஒரு தரப்பினரை ஆதரித்தால், எதிர் தரப்பினர் இவர் மீது ஆத்திரத்தில் இருந்ததாக கூறப்படுகின்றது.

இரவு நேரத்தில் பேட்டையில் இருந்த மனைவியை அழைத்து வருவதற்காக பாலுச்சாமி, குன்னத்தூரில் இருந்து மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது, கரிக்காதோப்பு என்னுமிடத்தில் வழிமறித்த இருவர் பாலுச்சாமியை சரமாரியாக அரிவாளால் வெட்டினர். இதில் அவர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தார். பாலுசாமியை வெட்டி படு கொலை செய்தவர்கள் தப்பிவிட்டதாக தெரிய வருகின்றது. இதனால், அங்கு போலீசார்

குவிக்கப்பட்டனர்.

இந்த கொலை குறித்து சுத்தமல்லி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+