இது மாயாவதி.. சிலைக்கு ரூ.550 கோடி-வறட்சிக்கு ரூ.250 கோடி
Subscribe to Oneindia Tamil

உத்தரபிரதேச சட்டசபையில் துணை நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில் ஒவ்வொரு துறைக்குமான நிதி ஒதுக்கீடு குறித்து விளக்கப்பட்டிருந்தது.
மாநிலம் முழுவதும் மாயாவதி உள்ளிட்ட தலைவர்களின் முழு உருவ சிலைகள், அவர்களது பெயரில பூங்காங்கள், நினைவகங்கள் அமைக்க ரூ.556 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அதே நேரத்தில் மாநிலத்தின் கடும் வறட்சியை சமாளிக்க ரூ.250 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
வறட்சி நிவாரணத்தைவிட சிலைகள் அமைக்க இரண்டு மடங்குங்கும் அதிகமான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கு சட்டசபையில் எதிர்க் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தபோதும் அதை மாயாவதி கண்டுகொள்ளவில்லை.
மேலும் தனக்கு புதிய ஹெலிகாப்டர் வாங்க ரூ. 10 கோடியையும் ஒதுக்கீடு செய்துள்ளார் மாயாவதி.












Click it and Unblock the Notifications