For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பெங்களூர்-குடிசையில் தீ: 3 குழந்தைள் பலி

By Staff
Google Oneindia Tamil News

பெங்களூர்: பெங்களூர் ராமமூர்த்தி நகர் பகுதியில் உள்ள குடிசைப் பகுதியில் ஏற்பட்ட தீவிபத்தில் ஒரு குடிசைக்குள் இருந்த 3 குழந்தைகள் உயிருடன் கருகி உயிரிழந்தன.

ராமமூர்த்தி நகர் பகுதியில் உள்ள விஜனபுரா என்ற இடத்தில் ஏராளமான குடிசை வீடுகள் உள்ளன. இங்குள்ள ஒரு வீட்டில் இன்று திடீரென தீவிபத்து ஏற்பட்டது.

அப்போது குடிசை வீட்டில் 7 மற்றும் 4 வயதான இரு சிறுமிகள், 3 வயது சிறுவன் இருந்துள்ளன. தீயில் சிக்கி இந்த மூன்று சிறார்களும் உயிருடன் கருகி பிணமானார்கள்.

தீவிபத்துக்கான காரணம் தெரியவில்லை. இந்தக் குழந்தைகளின் பெற்றோர் அப்போது அங்கு இல்லை. அவர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X