For Daily Alerts
Just In
பெங்களூர்-குடிசையில் தீ: 3 குழந்தைள் பலி
பெங்களூர்: பெங்களூர் ராமமூர்த்தி நகர் பகுதியில் உள்ள குடிசைப் பகுதியில் ஏற்பட்ட தீவிபத்தில் ஒரு குடிசைக்குள் இருந்த 3 குழந்தைகள் உயிருடன் கருகி உயிரிழந்தன.
ராமமூர்த்தி நகர் பகுதியில் உள்ள விஜனபுரா என்ற இடத்தில் ஏராளமான குடிசை வீடுகள் உள்ளன. இங்குள்ள ஒரு வீட்டில் இன்று திடீரென தீவிபத்து ஏற்பட்டது.
அப்போது குடிசை வீட்டில் 7 மற்றும் 4 வயதான இரு சிறுமிகள், 3 வயது சிறுவன் இருந்துள்ளன. தீயில் சிக்கி இந்த மூன்று சிறார்களும் உயிருடன் கருகி பிணமானார்கள்.
தீவிபத்துக்கான காரணம் தெரியவில்லை. இந்தக் குழந்தைகளின் பெற்றோர் அப்போது அங்கு இல்லை. அவர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
Comments
Story first published: Tuesday, August 4, 2009, 17:15 [IST]