சிவகாசியில் மீண்டும் பட்டாசு விபத்து - பெண் பலி
Subscribe to Oneindia Tamil
சிவகாசி: சிவகாசி அருகே மீண்டும் நடந்த பட்டாசு விபத்தில் பெண் பலியானார்.
சிவகாசி அருகே உள்ள நமஸ்கரித்தான் பட்டியில் கடந்த மாதம் 20ம் தேதி பெரும் பட்டாசு விபத்து நடந்தது. இதில் 18 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து சிறிது சிறிதாக ஆங்காங்கே பட்டாசு விபத்துக்கள் தொடர் கதையாகியுள்ளன.
இந்த நிலையில், மீனம்பட்டி என்ற இடத்தில் பிரத்தீவ்ராஜ் (37) என்பவருக்கு சொந்தமான பட்டாசு தொழிற்சாலையில் நேற்று மதியம் பட்டாசுகள் வெடித்து விபத்து ஏற்பட்டது. இதில் ஒரு அறை தரைமட்டமாகி விட்டது.
விரைந்து வந்த தீயணைப்புப் படையினர் தீயை அணைத்தனர். பின்னர் இடிபாடுகளை அகற்றிப் பார்த்தபோது, மீனம்பட்டி ராமசாமிபுரத்தை சேர்ந்த நாகராஜ் என்பவரின் மனைவி பவுனுத்தாய் (28) உடல் கருகி பிணமாக கிடந்தது தெரியவந்தது.
அவரது உடலை மீட்ட போலீஸார் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.












Click it and Unblock the Notifications