For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கூடங்குளம்: ரஷ்ய அணு என்ஜீனியர் மீது தாக்குதல்- மகளிடம் சில்மிஷம்

By Staff
Google Oneindia Tamil News

Koodankulam power plant
கூடங்குளம் (நெல்லை): நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் அணு மின் நிலையம் அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ள ரஷ்ய நாட்டு என்ஜீனியரைத தாக்கி அவரது மகளிடம் பாலியல் சேஷ்டைகள் புரிந்து அட்டகாசம் செய்துள்ளது ஒரு ரவுடிக் கும்பல்.

இந்த சம்பவத்தால் கூடங்குளத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கூடங்குளத்தில் ரஷ்ய நாட்டின் ஒத்துழைப்புடன் அணு மின் நிலையம் அமைக்கப்பட்டு வருகிறது. இந்தப் பணியில் ஈடுபட்டுள்ளவர்களில் ரஷ்ய நாட்டு அணு என்ஜீனியர் அலெக்சாண்டர் செர்னோவும் ஒருவர்.

இவர் நேற்று தனது மகள் விக்டோரியாவுடன் (21) கடற்கரையில் வாக்கிங் போய்க் கொண்டிருந்தார். அப்போது 20 வயதுக்குட்பட்ட 7 பேர் அடங்கிய ஒரு கும்பல் வந்தது.

அவர்கள் செர்னோவைத் தாக்கி அவர் வைத்திருந்த கேனான் கேமராவைப் பிடுங்கிக் கொண்டனர். பின்னர் விக்டோரியாவிடம் தவறாக நடந்து கொண்டனர்.

அதன் பின்னர் அக்கும்பல் அங்கிருந்து தப்பி ஓடி விட்டது. இதுகுறித்து செர்னோவ் போலீஸில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீஸார் அந்த கும்பலை தேடி வருகிறார்கள்.

கூடங்குளத்தில் நடந்த இந்த சம்பவத்தால் அணு மின் நிலையப் பணிகளில் ஈடுபட்டுள்ளோர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

பொறியாளர் செர்னோவ், அனு விஜய் காலனியில் தங்கி பணியாற்றி வருகிறார். கூடங்குளம் மின் நிலையப் பணிகளில் கிட்டத்தட்ட 100 ரஷ்ய என்ஜீனியர்கள் பங்கெடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்து.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X