திருப்பூர் சாயப்பட்டறைகளில் அதிகாரிகள் குழு திடீர் ஆய்வு!
திருப்பூர்: திருப்பூர் சாயப்பட்டறை சுத்திகரிப்பு நிலையங்களில் தமிழ்நாடு அரசு
மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் குழு திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
திருப்பூர் சாயப்பட்டறைகளில் அமைக்கப்பட்டுள்ள பொது சுத்திகரிப்பு நிலையங்கள் குறித்து மாசுக் கட்டுப்பாட்டு அதிகாரிகள் அய்வு செய்து வருகின்றனர்.
சாயப்பட்டறைகள் கழிவு நீரை அகற்றுவது, சுத்திகரிப்பது தொடர்பாக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இந்த வழக்கு விசாரணையின்போது திருப்பூர் சாயப்பட்டறைகளில் உள்ள பொது சுத்திரிப்பு நிலையங்களை தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் ஆய்வு செய்து, அந்த ஆய்வறிக்கையை ஆகஸ்ட் 13ம் தேதிக்குள் உச்ச
நீதிமன்றத்தில் சமர்பிக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இந்த உத்தரவின் பேரில் தமிழ்நாடு அரசு வாரிய அதிகாரிகள் திருப்பூர் சாயப்பட்டறை பொது சுத்திகரிப்பு நிலையங்களில் ஆய்வு மேற்கொண்டனர்.












Click it and Unblock the Notifications