ரக்ஷா பந்தன் குறித்து ஆர்வத்துடன் கேட்டறிந்த கசாப்
Subscribe to Oneindia Tamil
மும்பை: மும்பை சிறையில் அடைக்கப்பட்டுள்ள தீவிரவாதி அஜ்மல் கசாப், இன்று கொண்டாடப்பட்ட ரக்ஷா பந்தன் விழா குறித்து ஆர்வத்துடன் கேட்டறிந்தானாம்.
இன்று சிறை வளாகத்திற்குள் அமைந்துள்ள சிறப்பு கோர்ட்டுக்கு கொண்டு வரப்பட்டான் கசாப். அப்போது வக்கீல்கள், போலீஸார் கைகளில் ராக்கி கயிறு கட்டப்பட்டிருந்ததைப் பார்த்து அது என்ன என்று கேட்டான்.
ரக்ஷா பந்தன் விழாவின் முக்கியத்துவம், ராக்கி கயிற்றின் மகத்துவம் குறித்து அவனது வக்கீல் அப்பாஸ் கஸ்மி விளக்கினார். இதைக் கேட்டதும் ஆச்சரியமடைந்த கசாப், எனக்கு யாராவது இப்படி ராக்கி கயிறு கட்டுவார்களா என்று கேட்டானாம்.
அதற்கு வக்கீல் கஸ்மி கூறுகையில், உன்னை யாராவது சகோதரராக நினைத்தால் நிச்சயம் அந்தப் பெண் உனக்கு ராக்கி கயிறு கட்டுவார் என்று கூறியுள்ளார்.
இதைக் கேட்டதும் புன்னகைத்துக் கொண்டானாம் கசாப்.












Click it and Unblock the Notifications