சங்கரராமன் கொலை வழக்கில் 3 சாட்சிகள் 'பல்டி'
புதுச்சேரி: காஞ்சி வரதராஜபெருமாள் கோவில் மேலாளர் சங்கரராமன் கொலை வழக்கில் மேலும் 3 சாட்சிகள் பல்டி அடித்துள்ளனர்.
கடந்த 2004ம் ஆண்டு செப்டம்பர் மாதம் கோவிலில் வைத்து சங்கரராமன் படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திரர், இளையவர் விஜயேந்திரர் உள்பட 24 பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்த வழக்கு விசாரணை புதுச்சேரி மாவட்ட தலைமை அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி கிருஷ்ணராஜா முன்னிலையில் நடந்து வருகிறது.
நேற்று முன்தினம் இந்த வழக்கில் குறுக்கு விசாரணை தொடங்கியது.
சங்கரராமனின் மனைவி பத்மா, மகள் உமா, மகள் அனந்த், காஞ்சி மடத்தின் கணக்காளர் கணேஷ் ஆகியோரிடம் விஜயேந்திரரின் வழக்கறிஞர் தினகரனும், அரசுத் தரப்பில் வழக்கறிஞர் தேவராஜும் இந்த நால்வரிடமும் குறுக்கு விசாரணை நடத்தினர்.
சங்கரராமன் மனைவி பத்மா பல்டி:
அப்போது அவர்கள் போலீஸ் காட்டிய புகைப்படங்களை வைத்தே குற்றவாளிகளை அடையாளம் காட்டினோம். எங்கள் வீட்டிலிருந்து போலீசார் எடுத்து வந்த கடிதத்தில் இருப்பது சங்கரராமனின் கையெழுத்து இல்லை. இந்த கடிதத்தை இப்போது தான் பார்க்கிறோம். எங்களுக்கு எதுவுமே தெரியாது என்று போது பல்டி அடித்தனர்.
இந் நிலையில் நேற்று இந்த வழக்கு விசாரணை நடந்தபோது விஜயேந்திரரின் தம்பி ரகு, காஞ்சி மடத்தின் மேலாளர் சுந்தரேச அய்யர் உள்ளிட்ட 20 பேர் ஆஜராகினர். ஆனால், ஜெயேந்திரர், விஜயேந்திரர் உள்பட 4 பேர் ஆஜராகவில்லை.
இதில் 5 பேரிடம் குறுக்கு விசாரணை நடந்தது. துரைக்கண்ணு, கஜபதி, அச்சுதன் ஆகியோரிடம் வழக்கறிஞர் குறுக்கு விசாரணை நடத்தினார்.
அப்போது அவர்கள், ஏற்கனவே குற்றவாளிகளின் போட்டாக்களை எங்களிடம் காட்டி குற்றவாளிகளை அடையாளம் காட்டும்படி போலீசார் கூறினர், அதன்படி தான் நாங்கள் அடையாளம் காட்டினோம் என்று முரணாக வாக்குமூலம் அளித்தனர்.
மற்ற 2 சாட்சிகளான குப்புசாமி, குமார் ஆகியோரிடம் குறுக்கு விசாரணை நடத்தவில்லை.
இதைத் தொடர்ந்து இந்த வழக்கு விசாரணையை வரும் செப்டம்பர் 9ம் தேதிக்கு நீதிபதி கிருஷ்ணராஜா ஒத்திவைத்தார்.
ஜெயேந்திரரின் பவள விழா:
இந் நிலையில் ஜெயேந்திரரின் 75ம் ஆண்டு ஜெயந்தி (பவள விழா) நாளை தொடங்கி அடுத்த ஆண்டு ஜூலை மாதம் 28ம் தேதி வரை நடக்கிறது.
இதையொட்டி 75 பேருக்கு பசுக்கள் தானமாக வழங்கப்படுகின்றன. மாநிலம் முழுவதும் 75 கோவில்களிலிருந்து கொண்டு வரப்பட்ட பிரசாதங்கள் ஜெயந்திரருக்கு வழங்கப்படும். 75 துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு ஜெயேந்திரர் பரிசுகளை வழங்குகிறார்.
75 வித்வான்களின் இசை நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஜெயேந்திரரின் பிறந்த தஞ்சை மாவட்டத்திலுள்ள இருள்நீக்கி கிராமத்திலும் இதையொட்டி சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
-
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா! -
இந்தியன் வங்கியின் சூப்பர் தங்க நகைக்கடன் திட்டம்.. 3 லட்சம் வரை ஆவணங்களின்றி அரை மணி நேரத்தில் பணம் -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க புதிய ரூல்ஸ் .. மக்கள் அறிய வேண்டிய 25 நாட்கள் விதிமுறை -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
மக்கள் நீதி மய்யம் இப்படி கேட்கும்ன்னு நினைக்கவே இல்லையே.. ஒரு செகண்ட் ஸ்டன் ஆன திமுக.. என்னாச்சு?












Click it and Unblock the Notifications