பத்தாம் வகுப்பு துணைத் தேர்வு முடிவுகள் வெளியீடு
சென்னை: பத்தாம் வகுப்பு துணைத் தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டன.
கடந்த ஜூலை மாதம் நடைபெற்ற எஸ்.எஸ்.எல்.சி, ஓ.எஸ்.எல்.சி., ஆங்கிலோ இந்தியன் சிறப்புத் துணைத் தேர்வு எழுதியவர்களின் முடிவுகள் இன்று காலை வெளியிடப்ட்டன.
இந்த முடிவுகளை,
www.dge1.tn.nic.in
www.dge2.tn.nic.in
www.dge3.tn.nic.in
www.pallikalvi.in ஆகிய இணையதளங்கள் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
மதிப்பெண் சான்றிதழ்கள் வருகிற 11, 12, 14 ஆகிய தேதிகளில் தேர்வு எழுதிய மையங்களுக்குச் சென்று மாணவ, மாணவியர் பெற்றுக் கொள்ளலாம்.
மறு கூட்டல்...
மறுகூட்டல் விண்ணப்பங்கள் 17 முதல் 19-ந் தேதி வரை மாவட்ட கல்வி அலுவலர் அலுவலகங்கள் (சென்னை நீங்கலாக), நெல்லை, மதுரை, கோவை, திருச்சி, கடலூர், வேலூர் மற்றும் சென்னை அரசுத் தேர்வுகள் மண்டலத்துணை இயக்குனர் அலுவலகங்கள் ஆகிய இடங்களில் வழங்கப்படும்.
எஸ்.எஸ்.எல்.சி, ஓ.எஸ்.எல்.சி., ஆங்கிலோ இந்தியன் சிறப்புத் துணைத் தேர்வுக்கான மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் 19-ந் தேதியாகும்.
2 தாள்கள் கொண்ட ஒவ்வொரு பாடத்திற்கும் மறுகூட்டல் கட்டணம் ரூ.305 ஆகும். ஒரு தாள் கொண்ட ஒவ்வொரு பாடத்திற்கும் ரூ.205 ஆகும்.