சுரேஷ்குமாரின் தலை எரிப்பு-குற்றப் பத்திரிக்கையில் போலீஸ்

சென்னையைச் சேர்ந்த நகை வியாபாரி சுரேஷ் குமார் நேமிசந்த் ஜெயின் என்பவால் கொலை செய்யப்பட்டார். அவரது உடலை துண்டு துண்டாக வெட்டி 3 இடங்களில் வீசினான் நேமிசந்த். ஆனால், தலை மட்டும் சிக்கவில்லை.
இந்தத் கொலை வழக்கில் ஒனறரை மாதங்களுக்குப்பின் நேமிசந்த் கடந்த மாதம் 23ம் தேதி கைது செய்யப்பட்டான்.
அவனிடம் போலீசார் விசாரித்தபோது, சுரேஷ் குமாரின் தலையை அடித்து உடைத்து நொறுக்கி எம்.கே.பி.நகர் போலீஸ் நிலையம் பின்புறம் உள்ள புதர் பகுதியில் வீசியதாக கூறினான்.
ஆனால், புதருக்குள் போலீசார் பல நாட்கள் தேடியும் தலை கிடைக்கவில்லை. இதனால் இந்த வழக்கில் குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்வதிலும் தாமதம் ஏற்பட்டது.
இந் நிலையில் இந்த தலை பிரச்சனைக்கு போலீசார் புதிய தீர்வு கண்டுள்ளனர். அதன்படி நேமிசந்த் தலை பகுதியை வீசியதாக சொன்ன புதர் பகுதியையொட்டிய குப்பைமேட்டிலிருந்து வழக்கமாக குப்பை அள்ளும் மாநகராட்சி லாரி அதையும் சேர்த்து வாரிச் சென்றுள்ளது.
இந்த குப்பைகளோடு கலந்து விட்ட சுரேஷ் குமாரின் நொறுங்கிய தலைபகுதியை கொடுங்கையூரில் உள்ள குப்பை கிடங்கில் குப்பைகளோடு தீவைத்து எரிக்கப்பட்டுவிட்டது. எனவே தலை பகுதியை கைப்பற்ற முடியவில்லை என்று குற்றப் பத்திரிக்கையில் போலீசார் தெரிவித்துள்ளனர்.
தலை கிடைக்காவிட்டாலும் இந்த வழக்கில் நேமிசந்த் தப்ப முடியாது என்று போலீசார் கூறுகின்றனர். கைப்பற்றப்பட்ட உடல் பாகங்களை வைத்து அது சுரேஷ் குமாரின் உடல் தான் என்பது உறுதியாகிவிட்டதாலும், நேமிசந்தின் வீட்டில் கிடைத்த தடயங்களில் அங்கு தான் சுரேஷ் கொல்லப்பட்டார் என்பது உறுதிப்படுத்தப்பட்டுவிட்டதாலும் நேமிசந்துக்கு உயர்ந்தபட்ச தண்டனை கிடைப்பது உறுதி என்று போலீசார் நம்புகின்றனர்.
-
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சிறகடிக்க ஆசை : கண்ணீர் விட்டு அழுத மனோஜ்.. இவருக்கா இந்த நிலைமை? முத்து மீனா செய்த செயல்! கதையே மாறுது -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
Illatharasi: இல்லத்தரசிகளுக்கு ரூ 8000! திமுக கூப்பனில் பிரிட்ஜ், வாஷிங் மெஷின் வாங்க முடியுமா? -
சிறுசேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்தவர்களுக்கு சூப்பர் சர்ப்ரைஸ்.. ஏப்ரல் 1 மத்திய அரசின் அதிரடி -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
சிலிண்டர் ஏஜென்சி வைத்திருக்கும் நண்பனின் தந்தைக்கு மாதம் 1.90 லட்சம் வருமானம்.. நெட்டிசன் தகவல் -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications