மீண்டும் அரசியலில் சந்திரிகா-மகனை தேர்தலில் நிறுத்துகிறார்

இலங்கையில் ராஜபக்சேவுக்கு எதிராக முக்கிய எதிர்க்கட்சிகள் ஒன்று திரண்டு மெகா கூட்டணியை அமைக்கவுள்ளன. இதற்கான முயற்சியில் முன்னாள் அமைச்சரும், சந்திரிகாவுக்கு நெருக்கமான தலைவருமான மங்கள சமர வீரா மேற்கொண்டுள்ளார்.
வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ராஜபக்சே கட்சியை வீழ்த்தும் வகையில் இந்த வியூகங்களை வகுத்து வருகிறார் சமரவீரா. இவர் ஆளும் சுதந்திராக் கட்சியைச் சேர்ந்தவர்தான். ஆனால் ராஜபக்சேவாவால் ஒதுக்கப்பட்டவர். இதனால் அங்கிருந்து வெளியேறி சிறிலங்கா சுதந்திரக் கட்சி (மக்கள்) என்ற புதுக் கட்சியைத் தொடங்கியுள்ளார்.
ராஜபக்சே ஆட்சிக்கு வந்த பின்னர் அவரது குடும்பத்தினர்தான் ஆட்சியில் கோலோச்சி வருகின்றனர். பண்டார நாயக்கே குடும்பத்தினர் ஓரம் கட்டப்பட்டு விட்டனர்.
இதையடுத்தே பண்டாரநாயக்கே குடும்பத்துக்கு நெருக்கமானவரான சமரவீரா, மீண்டும் பண்டாரநாயக்கே குடும்பத்தை தீவிர அரசியலுக்கு இழுத்து வரும் முயற்சியில் இறங்கியுள்ளார்.
பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி, சுதந்திரக் கட்சியின் மக்கள் பிரிவு, சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ், ஜனநாயக மக்கள் முன்னணி மற்றும் ஜாதிக ஹெல உறுமயவில் இருந்து பிரிந்துசென்ற நவ ஹெல உறுமய ஆகியவை இணைந்து புதிய பெரும் கூட்டணியை உருவாக்க திட்டமிட்டுள்ளன.
இந்தக் கூட்டணியின் சார்பில் அடுத்த பொதுத் தேர்தலில் கம்பஹா மாவட்டத்தில் சந்திரிகாவின் ஒரே ஆண் வாரிசான விமுக்தி குமாரதுங்கவை நிறுத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும், சந்திரிகாவை எம்.பி. தேர்தலி்ல் நிறுத்தி வெற்றி பெற வைத்து அவரை பிரதமராக்கவும் திட்டம் தீட்டப்பட்டுள்ளது.
இலங்கையின் அரசியலமைப்புச் சட்டத்தின்படி ஒருவர் 2 முறை மட்டுமே அதிபராக இருக்க முடியும். சந்திரிகா ஏற்கனவே 2 முறை அதிபராக இருந்து விட்டார். எனவே அவரால் மீண்டும் அதிபராக முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.
அதேசமயம், அவர் எம்.பியாக முடியும். எம்.பியானால் அவர் பிரதமராவது எளிது என்பதால், பிரதமர் பதவிக்கு சந்திரிகாவைக் கொண்டு வர திட்டமிடப்பட்டு வருகிறது.
உள்ளூர் அரசியலில் இனிமேல் தான் ஈடுபடப்போவதில்லை என சந்திரிகா ஏற்கனவே அறிவித்திருந்த போதிலும், தற்போது உருவாக்கப்படும் எதிர்க்கட்சிகளின் கூட்டணியின் பின்னணியில் அவரின் செயற்பாடுகளும் முக்கியமானதாக இருப்பதாக கூறப்படுகிறது.
புதிய எதிர்க்கட்சிகளின் கூட்டணி இம்மாத இறுதிக்குள் அதிகாரபூர்வமான முறையில் பிரகடனம் ஒன்றை வெளியிடும் எனவும், அதில் புதிய கூட்டணியின் சின்னம் உள்ளிட்ட விவரங்கள் இடம் பெறும் எனவும் தெரிகிறது.
-
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்! -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
தேசிய ஜனநாயக கூட்டணிக்கு விஜய் வருகிறாரா? ஒரே போடாக போட்ட எடப்பாடி பழனிசாமி -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
அம்பானி கொடுத்த பெரிய ஆஃபர்! சிஎஸ்கே கடைசியாக தான் சீனில் வந்தது.. சஞ்சு சாம்சன் தந்தை சொன்ன மேட்டர் -
41.5%, 36.2%, 13.6%.. திமுக, அதிமுக கணக்கை தலைகீழாக மாற்றும் 3வது நபர் இவர்தானா? உடைத்து சொன்ன சர்வே -
கேஸ் பிரச்சனை எப்போது சரியாகும்.. வெளியான குட்நியூஸ்.. மக்கள் அறிய வேண்டியவை -
தைலாபுரத்தில் 90 நிமிட ரகசியம்: சசிகலா ராமதாஸுக்கு தந்த க்ளூ.. தலைகீழாக மாறும் வட தென் மாவட்ட கணக்கு -
சிறகடிக்க ஆசை: மீனா சொன்ன குட் நியூஸ்.. சந்தோஷத்தில் அண்ணாமலை! சத்யா காதலுக்காக முத்து எடுக்கும் முடிவு -
கேஸ் தட்டுப்பாட்டுக்கு ‘குட்பை'.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்கும் இந்திய கப்பல்கள்.. என்னென்ன பலன்? டேட்டா பாருங்க -
சுயநலமாக இருக்காதீங்க.. என்ன நடந்தது என்று தெரியாமல் இப்படி பேசாதீங்க.. நடிகர் ஸ்ரீமன் ஆதங்கம் -
இந்திய வரலாற்றில் முதல்முறை.. தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் நோட்டீஸ்!












Click it and Unblock the Notifications