ஜி.கே.மணி சம்பந்தி-அதிமுகவிலிருந்து ஜெ. கல்தா
இதில் பாமக தலைவர் ஜி.கே.மணியின் சம்பந்தியும் ஒருவராவார்.
இது குறித்து கொடநாட்டில் ஓய்வெடுத்தபடி அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
அதிமுகவின் கொள்கை- குறிக்கோள்களுக்கும், கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கட்சியின் கட்டுப்பாட்டை மீறி களங்கமும், அவப்பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தாலும் திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் ஒன்றிய அதிமுக செயலாளர் வலசை இரா.சந்திரசேகர் இன்று முதல் அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார்.
அதே போல, தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினம் அதிமுக செயலாளர் அப்துல்காதர், கானம் பேரூராட்சி அதிமுக செயலாளர் செந்தமிழ் சேகர் ஆகியோர் கட்சியின் கண்ணியத்துக்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதால் அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார்கள். கட்சி தொண்டர்கள் யாரும் இவர்களுடன் எவ்வித தொடர்பும் வைத்துக் கொள்ளக் கூடாது என்று கூறப்பட்டுள்ளது.
இதில் வலசை சந்திரசேகர் போலி பத்திரம் தயாரித்து நிலம் விற்ற மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் ஜி.கே.மணியின் சம்பந்தி என்பது குறிப்பிடத்தக்கது.