அதிமுகவினரே தேமுதிகவுக்கே ஓட்டுப் போடுங்கள் - பிரேமலதா

தொண்டாமுத்தூர் இடைத் தேர்தல் பிரசாரத்திற்காக விஜயகாந்தின் மனைவி பிரேமலதா இன்று கோவை வந்தார். அவருக்கு 1-வது பகுதி செயலாளர் பாபு தலைமையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து 72-வது வார்டு போலீஸ் குடியிருப்பு அருகே பிரேமலதா தனது தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார்.
பின்னர் கணபதி மோர் மார்க்கெட் பஸ் நிலையம் பகுதியில் வேனில் இருந்தபடியே பிரசாரம் செய்தார்.
அப்போது அவர் பேசுகையில், விருத்தாசலம் தொகுதியில் தேமுதிக தலைவர் மீது மக்கள் நம்பிக்கை வைத்து அவரை வெற்றி பெறச் செய்தனர். அந்த நம்பிக்கை வீண் போகாத வகையில் அந்த தொகுதியை முதன்மை தொகுதியாக அவர் மாற்றிக்காட்டியுள்ளார்.
தொண்டாமுத்தூர் தொகுதியில் போட்டியிடும் தே.மு.தி.க. வேட்பாளர் தங்கவேலுவை வெற்றி பெற செய்தால் இந்த தொகுதியையும் முதன்மை தொகுதியாக மாற்றிக் காட்டுவோம்.
மேலும் இங்கு 10 இலவச கம்ப்யூட்டர் மையங்கள், 3 தையல் பயிற்சி மையங்கள் அமைக்கப்படும். அதோடு தொகுதி வளர்ச்சி திட்டத்தில் மருத்துவ மையமும் அமைக் கப்படும்.
அதிமுக தொண்டர்கள், தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகளுக்கு வாக்களிக்காமல் தேமுதிகவுக்கு வாக்களிக்க வேண்டும் என்றார் பிரேமலதா.












Click it and Unblock the Notifications