இந்தோனேசியா அதிபரை கொல்ல சதி - முறியடிப்பு
ஜகார்த்தா: இந்தோனேசிய அதிபர் சுசிலோ பாம்பங் யுதோயானோவை தற்கொலை படை தாக்குதல் கொலை செய்ய மேற்கொள்ளப்படவிருந்த சதி முறியடிக்கப்பட்டது.
இந்தோனேசியாவில் ஜாமியா இஸ்லாமியா என்ற தீவிரவாத இயக்கம் செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பி்ன் தலைவர் நூருதீனுக்கும், அல் கொய்தா அமைப்புக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது.
அல்-கொய்தாவின் தென் கிழக்கு ஆசிய பகுதியின் தலைவராக கருதப்படும் நூருதீன், இந்தோனேசியாவில் சமீபகாலமாக நடந்து வரும் தற்கொலை படை தாக்குதலுக்கு மூலக் காரணமானவராக குற்றம் சாட்டப்பட்டு வருகிறார்.
இந்நிலையில் இந்த அமைப்பை சேர்ந்த இரண்டு தற்கொலை படை தீவிரவாதிகளை மேற்கு ஜாவா பகுதியில் உள்ள பெகாசி நகரில் நடந்த சோதனையின் போது போலீசார் சுட்டு வீழ்த்தினர். அவர்களை போலீசார் சுட்டு கொன்ற இடம் அதிபர் வீட்டுக்கு மிகவும் அருகில் அமைந்துள்ளது.
இவர்கள் அதிபரின் வீட்டின் மீது வெடிகுண்டுகளை நிரப்பிய லாரியை மோதவிட்டு தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்ததாக கூறப்படுகிறது.
போலீசார் நடத்திய மற்றொரு சோதனையில் ஜமையா இஸ்லாமியா தலைவர் நூருதீன் சுட்டு கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால், இது உறுதி செய்யப்படவில்லை












Click it and Unblock the Notifications