காஷ்மீருக்குள் ஊடுருவ காத்திருக்கும் 1500 பாக். தீவிரவாதிகள்
டெல்லி: பாகிஸ்தானில் இருந்து இந்திய எல்லைக்குள் ஊடுருவ சுமார் 1500 தீவிரவாதிகள் தயார் நிலையில் இருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து எல்லை பகுதியில் ராணுவம் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தானில் இருந்து செயல்பட்டு வரும் லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாத அமைப்பு காஷ்மீரில் உள்ள எல்லை கட்டுபாட்டு கோட்டு பகுதியை தாண்டி இந்தியாவுக்குள் அடிக்கடி ஊடுருவி நாசவேலைகளில் ஈடுபட்டு வருகிறது.
இதே போல் வரும் ஆகஸ்ட் 15ம் தேதி நடக்கவிருக்கும் சுதந்திர தின விழாவை சீர்குலைக்கும் நோக்கில் அந்த அமைப்பு கடந்த மூன்று வாரத்தில் சுமார் 50 தீவிரவாதிகளை காஷ்மீருக்குள் ஊடுருவ செய்துள்ளதாக உளவு துறை செய்திகள் கூறுகின்றன.
அதே நேரத்தில் மேலும், சுமார் 1500 தீவிரவாதிகள் இந்தியாவுக்குள் ஊடுருவ தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளது. இவர்கள் சிறு சிறு குழுக்களாக ஊடுருவ முயற்சிப்பதாக கூறப்படுகிறது. இதை முறியடிக்க அப்பகுதியில் இந்திய ராணுவத்தினர் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.
ஊடுருவிய தீவிரவாதிகளை தேடும் பணியில் ராணுவத்தினர் இரவு, பகலாக செயல்பட்டு வருகின்றனர். நேற்று முன்தினம் லஷ்கர் அமைப்பை சேர்ந்த மூன்று தீவிரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டனர். அவர்களிடம் இருந்து ஏகே 47, வெடிகுண்டுகள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இந்நிலையில் காஷ்மீரில் இந்த ஆண்டு சுதந்திர தின விழாவை முழு பாதுகாப்புடன் நடத்த வேண்டும் என்ற நோக்கத்தில ராணுவ உயரதிகாரிகள் கூட்டம் நேற்று ஜம்முவில் இருந்து சுமார் 15 கிமீ தொலைவில் இருக்கும் நாக்ரோடா பகுதியில் நடந்தது.
கூட்டத்தில் கலந்து கொண்ட காஷ்மீர் மாநில அரசின் பாதுகாப்பு ஆலோசகரும், லெப்டினன்ட் ஜெனரலுமான ஆர்.கே.சாமி கூறுகையில்,
எல்லைப்பகுதியில் தீவிரவாதிகள் அதிகளவில் ஊடுருவ முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். அவர்கள் காஷ்மீர் பகுதியில் அமைதியை சீர்குலைக்க நாசவேலைகளில் ஈடுபடலாம். அவர்களை ஓடுக்க தேவையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்.
-
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
மத்தி மீனின் "கோடி" ரூபாய் ரகசியம்.. விலை மலிவான இந்த மீனுக்குள் ஒளிந்திருக்கும் நன்மை! வரப்பிரசாதம்












Click it and Unblock the Notifications