கடமை தவறி விட்டது அதிமுக - தா.பாண்டியன்
தூத்துக்குடி: அதிமுக தனது கடமையைச் செய்யத் தவறி விட்டது என்று இந்திய கம்யூனிஸ்ட் செயலாளர் தா.பாண்டியன் கூறியுள்ளார்.
தா.பாண்டியனும், மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் என்.வரதராஜனும் ஆகியோர் தூத்துக்குடியில் செய்தியாளர்களைச் சந்தித்தனர்.
அப்போது தா.பாண்டியன் கூறுகையில், அதிமுக கூட்டணியில்தான் கம்யூ கட்சிகள் உள்ளன. இடைத் தேர்தலை புறக்கணித்தன் மூலம் அதி்முக, மதிமுக, பாமக போன்ற கட்சிகள் அரசியல் கடமையை செயலாற்ற தவறிவிட்டன.
துறைமுகங்கள் வழியாக சந்தன மரங்கள், மணல் கடத்துவதை தடுத்து நிறுத்த வேண்டும். ஊழல் வழக்கில் சிக்கியுள்ள சென்னை துறைமுக முன்னாள் சேர்மன் சுரேசிடம் தீவிர விசாரணை நடத்தினால் பல முக்கிய புள்ளிகள் சிக்குவார்கள் என்றார்.
வரதராஜன் பேசுகையில், திமுக ஆட்சியில், ஐனநாயக உரி்மைகள் அதிகளவில் பறிக்கப்படுகிறது. சத்துணவு ஊழியர்கள் ஊதிய உயர்வு கேட்டால் அவர்களை அரசு மிரட்டுகிறது.
பருப்பு வகைகளின் விலை பன்மடங்கு உயர்ந்துள்ளது. அரசு அலுவலங்களில் லஞ்சம், ஊழல் தலைவிரித்தாடுகிறது. இதுபோன்ற நேரங்களில் ஜனநாயக வழியில் நடைபெறும் தேர்தல் மூலம்தான் தீர்வு காண வேண்டும். ஆனால் இந்த தேர்தலை அதிமுக புறக்கணித்து விட்டதால் கம்யூ கட்சிகள் இணைந்து போட்டியிடுகின்றன. இடைத் தேர்தலில் நாங்கள் வெற்றி பெறுவோம் என்றார் வரதராஜன்.












Click it and Unblock the Notifications