சூ கி சிறை தண்டனையை 18 மாதமாக குறைந்தது மியான்மர் அரசு
யாங்கோன்: மியான்மர் ஜனநாயக தலைவி ஆங் சான் சூ கிக்கு விதிக்கப்பட்ட மூன்று ஆண்டு தண்டனையை 18 மாதங்களாக மியான்மர் ராணுவ அரசு குறைத்துள்ளது.
மியான்மரில் ராணுவ ஆட்சியை ஒழித்துவிட்டு ஜனநாயகம் மலர வேண்டும் என்ற நோக்கில் ஆங் சான் சூ கி அகிம்சை முறையில் போராடி வருகிறார். அவர் மீது பல்வேறு குற்றங்களைச் சாட்டி மியான்மர் அரசு அவரை வீட்டுக் காவலில் வைத்துள்ளது.
சமீபத்தில் அவருக்கு விதிக்கப்பட்ட வீட்டுகாவல் முடிவடைந்தது. இதையடுத்து அவரை விடுதலை செய்ய வேண்டும் என அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் கோரிக்கை விடுத்தன.
ஆனால், வீட்டுக்காவலில் இருந்த அவர் தனது வீட்டுக்குள் அமெரிக்கர் ஒருவரை நுழைய அனுமதித்ததாக கூறி புதிய வழக்கைத் தொடர்ந்தது.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் அவருக்கு மேலும் 3 ஆண்டுகள் தண்டனை விதித்தது. மேலும், எட்டாவ் எனப்படும் அந்த அமெரிக்கருக்கு மூன்று வழக்கின் கீழ் 7 ஆண்டு சிறை தண்டனை அளித்துள்ளது.
இந் நிலையில் சூ கிக்கு விதிக்கப்பட்ட தண்டனையை அந்நாட்டு ராணுவ ஜெனரல் தானே சுவே 18 மாதங்களாக குறைத்துள்ளார்.
சூ கிக்கு மீண்டும் தண்டனை விதிக்கப்பட்டது குறி்த்து இங்கிலாந்து பிரதமர் கார்டன் பிரவுன் கூறுகையில், வரும் 2010ல் மியான்மரில் நடக்கவிருக்கும் பொது தேர்தலில் அவர் போட்டியிட கூடாது என்ற நோக்கத்தில் இவ்வாறு செய்யப்பட்டுள்ளது என்றார்.