கம்பம் திமுக வேட்பாளரை நாய் கடித்தது!
கம்பம்: கம்பம் திமுக வேட்பாளர் ராமகிருஷ்ணனை நாய் கடித்தது.
இடைத் தேர்தலில் போட்டியிடும் ராமகிருஷ்ணன் கம்பம் யாதவர் தெருவில் திமுகவினருடன் மேள தாளத்துடன் பிரசாரம் செய்து கொண்டிருந்தார்.
அப்போது கூட்டத்தைக் கண்டு மிரண்டு ஓடிய நாய் வேட்பாளர் ராமகிருஷ்ணனை காலில் கடித்தது. இதில் அவருக்கு காயம் ஏற்பட்டது. இதையடுத்து தனியார் மருத்துவமனைக்கு விரைந்து சென்ற அவர் சிகிச்சை பெற்றார்.
இந்த சம்பவத்தால் பிரச்சாரம் பாதியிலேயே ரத்து செய்யப்பட்டது.
வாக்காளர்களுக்கு திமுக வேட்டி-சேலை?:
இந் நிலையில் இந்தத் தொகுதியில் வாக்காளர்களுக்கு விதிமுறைகளை மீறி வேட்டி, சேலை மற்றும் பணம் வழங்கினால் வழக்குப் பதிவு செய்து மேல் நடவடிக்கை எடுக்குமாறு போலீசாருக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
இத் தொகுதியில் திமுகவினர் வீடு, வீடாகச் சென்று வேட்டி, சேலைகள் மற்றும் பணம் பட்டுவாடா செய்வதாக தேமுதிக வேட்பாளர் அருண்குமார், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் ராஜப்பன் ஆகியோர் தேர்தல் ஆணையத்திடம் புகார் தெரிவித்திருந்தனர்.
இதையடுத்து, வாக்காளர்களுக்கு வேஷ்டி, பணம் மற்றும் பொருள்கள் வழங்கினால், வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தி மேல் நடவடிக்கை எடுக்குமாறு போலீசாருக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.